உலகக்கிண்ணம் II - பரபரப்பாகும் போட்டிகள்.

பரபரப்பாக நடந்துகொண்டு இருக்கும் உலகக்கிண்ண தொடரிலே தற்சமயம் இலங்கை இந்திய அணிகளுக்கு எதிர்பாராத சில நிகழ்வுகள் நடந்திருந்தாலும் இது அவ்வணிகள் அடுத்த சுற்றுக்குள் நுழைவதற்கு தடையாக இருக்கப்போவதில்லை என்பதுவே உண்மை. இவை தவிர்ந்த ஏனைய போட்டிகளின் முடிவுகள்  எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளன.



22 திகதி இங்கிலாந்து நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியிலே நெதர்லாந்து அணியிடம் இருந்து  மிகப்பெரும் நெருக்கடியை பெற்றிருந்தது இங்கிலாந்து. முதலில் துடுப்பெடுத்து ஆடிய நெதர்லாந்து  Ryan ten Doeschate இன் அற்புதமான சதத்துடன் 292 ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து   48 .4 ஓவர்களிலே வெற்றியிலக்கை எட்டியது. எனினும் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெதர்லாந்து பந்துவீச்சாளர்களால் எவ்வித நெருக்கடியையும் கொடுக்க முடியவில்லை.



 அடுத்து பாகிஸ்தான் கென்யா அணிகளுக்கிடையிலான போட்டியிலே எதிர்பார்த்தது போல பாகிஸ்தான் ஒரு மிகப்பெரும் வெற்றியை பெற்றது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் உமர் அக்மலின் அதிரடி 71 ஓட்டங்களும் கென்யாவால் அள்ளி வழங்கப்பட்ட 46 உதிரிகளுடனும் 317 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய கென்யா அப்ரிடியின் சுழலில் சிக்குண்டு 112 ஓட்டங்களுக்கு சுருண்டுகொண்டது.



அடுத்து பரபரப்பான மேற்கிந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியிலே தென்னாபிரிக்கா எந்தவித நெருக்கடியும் எதிர்கொள்ளாது இலகுவாக வெற்றியை பெற்றுக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாட வந்த மேற்கிந்தியா ஆரம்பத்தில் கிறிஸ் கெயிலை இழந்தாலும் இரண்டாவது விக்கெட்டுக்காக சிறப்பாக ஆடியது. எனினும் பின்வரிசை ஆட்டக்காரர்களின் தடுமாற்றம்  222 க்குள் சுருண்டுகொள்ள வழிவகுத்தது. அருமையாக பந்துவீசிய இம்ரான் தகிர் 4 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு ஆடிய தென்னாபிரிக்கா வில்லியர்சின் அதிரடி சதத்தின் மூலம் 43 ஆவது ஓவரிலே வெற்றியை பெற்றுக்கொண்டது.



 அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அவுஸ்ரேலியா  அணிகளுக்கிடையிலான போட்டியிலே அவுஸ்ரேலியாவின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாது  நியூசிலாந்தின் துடுப்பாட்ட வரிசை  சரிந்துகொள்ள அவுஸ்ரேலியா இலகு வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய நியூசிலாந்தின்  துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக  ஆட்டமிழக்க வெக்ரோரியும் நாதன் மக்கலமும்  இணைந்து  200 ஓட்டங்களை கடக்க வைத்தார்கள். 207 என்ற இலக்குடன் களமிறங்கிய அவேஸ்ரேலியா ஆரம்ப துடுப்பாட்டவீரர்களின் அதிரடி ஆட்டத்தின் துணையுடன் 34 ஓவர்களிலே வெற்றியை பெற்றுக்கொண்டது. ஷேன்  வேட்சன் 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்டு  ஒரு விக்கெட்டை  பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.



இலங்கை  அணிசார்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலே பரிதாபமாக இலங்கை தோல்வியடைந்தது. மலிங்க இல்லாத இலங்கை அணியின்  வேகப்பந்து வீச்சு பாகிஸ்தானிடம் எடுபடவில்லை. சுழலிலே  முரளி மட்டும் ஓட்டம் விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்தி பந்து வீசினாலும்  ஒரு விக்கெட்டை மாத்திரமே கைப்பெற்ற முடிந்தது. மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனிஸ்கான் சிறப்பாக செயற்ப்பட்டனர்.
277  என்ற இலக்கை துரத்திய இலங்கைக்கு ஆரம்ப துடுப்பாட்டம் நன்றாக இருந்தாலும் மகேல மற்றும் திலான் சமரவீரவின்  அடுத்தடுத்த ஆட்டமிழப்புக்கள் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. பின்வரிசையில் இறங்கிய சாமர சில்வா சிறப்பாக விளையாடினாலும் அதிகளாவான பந்துகளை வீணடித்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்.
பாகிஸ்தான் சார்பாக இந்த போட்டியிலும் அப்ரிடி சிறப்பாக பந்துவீசி 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து நான்கு மிக முக்கிய விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.



அடுத்து அனைவராலும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த  இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆட்டத்தின் இறுதி பந்துவரை பரபரப்பாக சென்று சமநிலையில் முடிவடைந்துள்ளது.  நாணய சுழற்ச்சியில் வென்ற இந்தியா துடுப்பாட்டத்தை தேர்வுசெய்து, மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. இதிலே அதிரடியாக  ஆடிய சச்சின் 5 சிக்ஸ்சர்கள் அடங்கலாக  தனது 47 வது சதத்தை பெற்றுக்கொண்டார். அத்தோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்வான் பந்து வீச்சு இந்தியாவிடம் எடுபடவில்லை. இந்தியா 350 ஓட்டங்களை தாண்டும்  என்று எதிர்பார்த்த வேளை ப்ரெஸ்ணனின்  சிறப்பான  வேகத்திலே 339 க்கு அனைத்து விக்கெட்டுக்களை இழந்துகொண்டது. யுவராஜ் மற்றும் காம்பீர் இரு அரைச்சதங்களை அணிக்காக பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த தொடக்கத்தை கொடுத்தார்கள். பீற்றர்சன் ஆட்டமிழக்கவும்  ற்றோட் விரைவில் ஆட்டமிழந்து சென்றார். எனினும் பின் வந்த இயன் பெல் உடன் இணைந்த அணி தலைவர்  ஸ்ரரிஸ் மிகவும் சிறப்பாக, வேகமாக இலக்கை நோக்கி நகர்ந்தனர். ஒரு கட்டத்தில் 42 ஓவர்களிலே 281 க்கு 2 விக்கெட், என்று இலக்கை மிக அண்மித்திருந்த இங்கிலாந்துக்கு சகீரின் பந்து வீச்சு மிக நெருக்கடியை கொடுத்தது. எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் ப்ரெஸ்ணன் மற்றும் ஸ்வான் ஆகியோரின் அதிரடி ஆட்டம் மற்றும்  இறுதி ஓவரில் அஜிமல் அடித்த சிக்ஸ்சருடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த போட்டியிலே இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது. சுழல் பந்துவீச்சாளர்கள்  பந்தை  ஸ்விங் செய்ய மிகவும் சிரமப்பட்டார்கள். எனினும் இங்கிலாந்துக்கு சாதகமாக முடிய வேண்டிய போட்டியை தனது அனுபவமும், சிறந்த ஜோக்கர் பந்துகளின் மூலமும் போட்டியை திசை திருப்பிய பங்கு சகீர்க்கானுக்கே. இந்திய அணியை பொறுத்தவரை ஐந்தாவது பந்துவீச்சாளர் குறை தற்போதும் வெற்றிடமாகவே உள்ளது. அது தவிர இனி வரும் போட்டிகளில் மூன்று வேகபந்து வீச்சாளர்களை  களமிறக்க முனைவார்கள் என்றே  தெரிகிறது.

சிரிக்க மட்டுமே சிந்திக்க தடை.


அரசியலுக்காக எப்படிப்பட்ட வேலையையும் செய்வார்கள் நம் அரசியல் வாதிகள் சில சமயங்களில் அதுவே காமெடி தனமாகவோ இல்லை பார்ப்பவர்களை  எரிச்சல் படுத்துவதாகவோ அமைந்துவிடும் அப்படிப்பட்ட சில போஸ்டர்கள.  (சிரிக்க மட்டுமே சிந்திக்க வேண்டாம்) 

"மதம்" கொண்டாச்சு! 



இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை வாங்கி கொடுத்த  கலைஞருக்கு  போடு ஓட்டு..!


கறுப்பு எம் ஜி ஆர் ;-)




பால் ஊத்தியாச்சு அடுத்து ..




                                                                                  ?




                                              தாயகம் தேசியம் தன்னாட்சி ?



                                                                 நானும் ரவுடி தான்.
 



 

இதை தான் பொறுத்துக்கொள்ளவே முடியவில்ல, மக்களுக்காக சாகிற வரை போராடிய ஒரு தலைவரை சம்மந்தமே இல்லாமல் ஒரு பார்ப்பன கும்பல் தம் அரசியலுக்காக பயன்படுத்துகிறதே! இந்த போஸ்டரை பாக்கிறவன் எல்லாம் முட்டாள் பயலுக என்றே முடிவு கட்டி அடிச்சு ஒட்டியது போல இருக்கு.

நாம் தமிழர்கள் கதைக்கிறோம்.....!






நாம் தமிழர்கள் கதைக்கிறோம்.....!

மானிட வர்க்கத்தில்
நாமும் ஒரு பகுதி தான்!
"தமிழர் " என்று
அடையாளப்பெயர் நமக்கு!
இருந்தும்
அதிகமானோர் விழிக்கும் பெயர்
"அகதிகள்"

உலகப்பந்திலே
எட்டுக்கோடி பேர்
நாம்!-இதில்
சில கோடி
உணர்வுகள் அற்ற
பிணங்களாகவும்,
பலகோடி
உரிமைகள் அற்ற
ஜடங்களாகவும்..!

எந்த ஒரு அழிவிலிருந்தும்
விரைவாக மீண்டுவிடுவோம்!,
காரணம்
அழிவென்பதே வாழ்வான போது
வாழப்பழகிக்கொண்டோம்!-இதுவே
எமது பலமும் கூட...!

ஏறித்தப்பவிடாது
ஒன்றன் பின் ஒன்றாக
காலைப்பிடித்து இழுத்துவிடும்
பெட்டிக்குள் அடைபட்ட
நண்டுகள் போல நம் குணம் !-இதுவே
நமது பலவீனம்...

சில லட்சம்
சாகும் போது,
பல லட்சம்
சினிமா பார்த்து  மகிழ்ந்தது,
எம் சமீபத்திய சாதனை!-இதை
உணர்வுகொண்ட  சிலரும்
தடுக்க முடியாமல் போன
இயலாமை, வேதனை..

அண்டத்தின்
மூலை முடுக்கு எங்கும்
நாம் இருக்கோம்! ஆனால்
நமக்கென்று இங்கே
யார் இருக்கா....?


பல்வேறு ஜோசனை கொண்டு
பதை வழியே நடந்தாலும்
பவுத்திரமாய் வீடு போய் சேரும்
நம் கால்கள் போல,
எமது  அன்றாட இருப்பும்  தொடர்கிறது.

நேற்று இஸ்ரேலில் இருந்து
இன்று எகிப்து வரை....
நம்பிக்கையுடன்...!

நாம் தமிழர்கள் கதைக்கிறோம்..!

உலகக்கிண்ணம் I - அடிவாங்கும் "குட்டி" அணிகள்.


அதோ இதோ என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலகக்கிண்ண போட்டிகள் அமர்க்களமாக ஆரம்பித்து விட்டன. இதிலே எதிர்பார்ப்புக்கள் போலவே இது வரையான போட்டிகளின் முடிவுகள் அமைந்துள்ளன.குட்டி அணிகளை துவம்சம் செய்துவிட்டன பெரிய அணிகள்.ஆசிய மைதானங்கள் என்றபடியால் அநேகமானவை துடுப்பாட்ட வீரர்களுக்கே சொர்க்க புரியாக இருக்கிறது.



பத்தொன்பதாம் திகதி இந்திய பங்களாதேஷ் அணிகளின் ஆட்டத்தில் சேவாக் பவுண்டரியுடன் இந்த உலகக்கிண்ணத்தை ஆரம்பித்து வைத்தார்.ஆரம்பம் முதலே பங்களாதேசின் பந்துவீச்சை பின்னி எடுத்தவர்கள் இறுதிவரை இந்திய துடுப்பாட்டகாரர்களின் ஆதிக்கமே முழுவதுமாக இருந்தது. அப்துர் ரசாக் கப்டன் சாகிப் உல் ஹசன் போன்ற சுழல்கள் இந்தியாவுக்கு நெருக்கடியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தாலும் அதையும் பொய்யாக்கினார்கள் சேவாக்கும் கோலியும் இணைந்து. சச்சினின் ரன் அவுட் வீண் தான் என்றாலும் அது அணிக்கு ஒரு பாதிப்பாக அமைந்துவிடவில்லை. இந்த உலகக்கிண்ண போட்டிகளிலே சேவாக் முதலாவது சதத்தை பெற்றார் அவரை தொடர்ந்து தற்சமயம் அசுர பார்மில் இருக்கும் விராத் கோலியும் 83 பந்துகளில் அதிரடியாக சதத்தை பெற்றார். இந்திய அணியை பொறுத்தவரை இனி வரும் போட்டிகளில் சச்சினை விட சேவாக்கே எதிரணிகளுக்கு தலையிடியாக இருப்பார் என்று தெரிகிறது.

370 என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கபட்ட போதே தெரிந்திருக்கும் பங்களாதேஷன்  தோல்வி.  இருந்தாலும் இந்திய பந்துவீச்சையும் பங்களாதேஷன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் துவைத்து எடுத்தது  குறிப்பிடத்தக்கது . அத்தோடு சிறீசாந் இந்தபோட்டியில் பங்களாதேஷுக்காக  விளையாடுவது போல தாராளமாக ஓட்டங்களை வாரி வழங்கினார். 
87 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணியின்  ஆட்ட நாயகனாக 170 ஓட்டங்களை  விளாசிய சேவாக் தெரிவு செய்யப்பட்டார்.

 

 அடுத்து இலங்கை கனடா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி. இதில் இலகுவாக இலங்கை வெற்றி பெற்றது. மகேலவின் அதிரடி சதம் சங்கக்காராவின் சிறப்பான ஆட்டம், பெரேரா, குலசேகர போன்றோரின் சிறந்த பந்துவீச்சு என்று போட்டி முழுவதும் இலங்கையின் ஆதிக்கமே. ஆட்ட நாயகனாக மகேல தெரிவானார்.



அடுத்து A பிரிவின் மற்றுமொரு போட்டியிலே கென்யாவை 87 ஓட்டங்களில் சுருட்டிய  நியூசிலாந்து இலகுவாக வெற்றி பெற்றது. இது நியூசிலாந்தின் எழுச்சியா இல்லை கென்யாவின் பலவீனமா என்பதற்கு   நியூசிலாந்தின் இனி வரும் போட்டிகள் விடையாக அமையும். அத்தோடு உலககிண்ண எதிர்வரும் போட்டிகளிலே பாகிஸ்தான் தவிர  நியூசிலாந்தும் கறுப்பு குதிரைகளாக வலம் வர வாய்ப்புள்ளது. ஆட்ட நாயகனாக பந்துவீச்சில் மிரட்டிய பென்னெட் தெரிவானார்.



 அவுஸ்ரேலியா சிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியிலே அவுஸ்ரேலிய 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. எனினும்  முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா ஒரு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்த்தாலும்  ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின்  ஆமை வேக துடுப்பாட்டம் அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. பயிற்சி போட்டிகளிலும் அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்டம் பலவீனமாக இருந்ததும்  அறிந்ததே. இருந்தும் சிம்பாவேயின் பலவீனமான துடுப்பாட்ட வரிசை அவுஸ்ரேலியாவின் பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

ஆக இதுவரை இடம்பெற்ற போட்டிகள் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்றாலும் போக போக ஆட்டங்கள் சூடு பிடிக்கும் என்பது நிச்சயம்.

கடவுளை கண்டேன்..!



நள்ளிருட்டு,
மூணு மணி நேரம்
இருக்கையில் அமர்ந்து
சினிமா பார்த்த களைப்பு வேறு ,
நாய்கள் குரைக்க
சிறு நடுக்கத்தோடு தெரு ஓரமா
தனித்து நடந்துகொண்டிருந்தேன்!

சற்று தூரத்தில்
ஒரு உருவம் ,
வெள்ளை வேட்டியும்
தலை நீள முடியுமாக..!

என்னருகில் வரவும்
"என்னய்யா நடிகரா நீங்க?"
சினிமா நினைப்பில் கேட்க,
நான் தான் "கடவுள்" என்று
பதிலும் வந்தது..!

சற்று திகைப்புடன்,
"எங்க போறிங்க இந்த நேரத்தில?"
ஆவலோடு கேட்டேன் நான்!

"சிறிது காலமா
என்னை தேடி வரும் பக்த கூட்டம்
வெகுவா  குறைஞ்சு போச்சு  "
சலித்துக்கொண்டார் கடவுள்!

ஆச்சரிய குறியை நானும்
முகத்தில் காட்டவே
புரிந்துகொண்டவராக
கடவுள் தொடர்ந்தார்..

"(ஆள்) சாமிகள்"
மக்களை தம் பக்கம்
இழுக்கும் சூட்சமம்
பெரிதாக நான் அறியிலேன்!
அறிந்துகொள்ளலாம்   என
ஆச்சிரமங்கள் தேடுகிறேன் !என்று
சொல்லி நகர தொடங்கினார்..!

"காவி உடுத்தவன்
கடவுளாகிறான்" என்று
நானும்  முனு முணுக்க -அது
காதில் விழுந்தவராக,
திரும்பி புன்னகைத்து
கடவுளும் சென்றுவிட்டார்!

சிறிது நாட்களின்  பின்
மீண்டும் அந்த "கடவுளை" கண்டேன்..
காவி உடையும்
கழுத்தில் உருத்திராட்சமுமாக
தொலைக்காட்சி பெட்டியில் ...! 

காதல் காதல் காதல்..!


                                   
                           
                                உதடுகள் மவுனமாக,
                                விழிகள் பேசிக்கொள்ளும்
                                இரண்டு உள்ளங்கள்
                                ஒன்றயொன்று தேடி சென்று
                                உரசிக்கொள்ளும்.
                                தனிமைகள் இனிமையாக
                                அவள் பேசும் வார்த்தைகளே 
                                உன் செவிக்கு இனிய கீதமாகும்.
                                நீ அருகில் என்ற ஒரு காரணமே
                                அவள் உயிர் வாழ அர்த்தமாகிவிடும்.
                                சிறு இடைவெளியும்
                                இதயத்தை கீறி காயப்படுத்தும்.

                                நீ இருக்கும் இடம் எல்லாம்
                                அவள் விம்பங்களாக,
                                உன்னையே நீ  உனர மறுப்பாய்
                                என்றும் அவள் நினைவுகளோடு
                                காதல் காதல் காதல்...  






                              

விஜயும் கிளம்பிட்டார்..!

 என்ன தான் வாரிசு நடிகராக அறிமுகமானாலும் சினிமாவிலே தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு திறமை தான் முக்கியம். இந்த வழியிலே பிரசாந், பிரபு,கார்த்திக்  என்று பலர் இலகுவாக சினிமாவுக்குள் நுழைந்து கொண்டாலும் அவர்களால் தங்களுக்கு என்று ஒரு நிலையான,நிரந்தரமான இடத்தை தேடிக்கொள்ளமுடியவில்லை.



இந்த வகையிலே அப்பா சந்திரசேகரால் ஆரம்பத்தில் மொக்கை படங்கள் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான விஜய் இன்று  தனக்கு என்று ஒரு நிலையான  இடத்தை பிடித்திருப்பது அவரின் திறமைக்கான அங்கீகாரம் தான். வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அதிலே தோற்பவன் ஜெயிப்பான் ஜெயிப்பவன் தோற்பான் என்ற அவரது டயலாக்கை போலவே ஆரம்பத்தில் பல தோல்விகள் பிறகு தொடர் வெற்றிகள் பின் தோல்வி வெற்றி என்று சென்று கொண்டு இருந்த போது மாஸ் ஹீரோவாக  ஆசைப்பட்டு கில்லியில் தொடக்கி சிவகாசி, போக்கிரி என்று நல்லாவே போய்க்கிட்டு இருந்த விஜயை சனியன் சகடையில் வராமல் ராகுல் காந்தி மூலம் வந்து தொற்றிக்கொண்டது.

தமிழ்நாட்டை பொறுத்த  வரை   மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்களில் அரசியல் வாதிகளையும் அடிச்சு முந்தி நிற்ப்பவர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர் மன்றங்கள்.போதாததற்கு கேரளாவில் சிலை வேறு. இப்படிப்பட்ட விஜயை தமது கட்சியில் இணைத்துக்கொண்டால் தமிழ்நாட்டு வாக்கு வங்கியை பெருக்கிக்கொள்ளலாம் என்ற சூழ்ச்சியோடு  ராகுல் காந்தி விஜயை தம் கட்சி  வசம் இழுக்க இந்த அழைப்பதை விட்டார். இந்த நேரம் தமிழ் மக்கள் காங்கிரஸ் கட்சி மீது கொதிப்படைந்து இருந்த காலம். ஆகவே  இந்த செய்தி விஜயை பொறுத்த வரை இருதலைகொள்ளி  எறும்பின் நிலை தான். ராகுலை சந்திக்க சென்றால் மக்களிடம் இருந்து பெரும் நெருக்கடி வரும். அதுவே தன் படங்களுக்கு ஆப்பாக மாறும். இல்லாமல் இந்தியாவை ஆளும்  கட்சியின் முக்கியஸ்தர் அழைக்கும் போது போகாமல் இருப்பது அவரை அவமதிக்கும் செயல்  ஆகவே  இதை  புறக்கணித்தாலும் அதுவே அரசியல் ரீதியாக நிகழ்காலத்திலோ இல்லை பிற்காலத்திலோ நெருக்கடிகளை ஏற்ப்படுத்தும். ஆகவே தமிழ் மக்களுக்கு  இருக்கும் மறதி வியாதியை தனக்கு சாதகமாக்கி கொண்ட விஜய் ராகுலை சென்று சந்திக்கிறார். இதனால் மக்களிடம் இருந்து குறிப்பாக புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து எதிர்பார்த்த எதிர்ப்பு கிளம்பியது. சில படங்களின் புறக்கணிப்பும் மும்மரகாக இடம்பெற்றது. வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று தொடர் தோல்வியால் துவட்டு போனார் விஜய்.
அப்பொழுது மூன்றாவது தரப்பு ஒன்றும் தனக்கு முதுகில் குத்தப்போகிறது என்று விஜய் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

எங்கே விஜய் சென்று காங்கிரசை சந்தித்த கையேடு அரசியலில் குதித்தால் தன் வாரிசு அரசியலுக்கு அதுவே ஆப்பாக அமைந்துவிடுமோ என்று பதறியவர்கள் ஆரம்பத்தில் விஜய்க்கு சிறிய அளவில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தார்கள்  இதுவே போக போக பெருக்க ஆரம்பித்து காவலன் ரிலீசில் பூதரகரமாக வெடித்தது.  தங்கள் அரசியல் பலத்தை கொண்டு  தியேட்டர்  உரிமையாளர்கள் வரை விஜய்க்கு எதிராக திருப்பி விட்டார்கள். என்றுமே விஜய் சந்தித்திராத நெருக்கடியாக மாறியது.



இதுவரை உறங்கு நிலையில் இருந்த விஜயின் ரசிகர் பட்டாளம் விஜய் இந்த நெருக்கடிகளில் முழி பிதுங்கி நிற்பதை கண்டு கொதித்தெழுந்தது. விஜயின் காவலன் படத்துக்கு பொருட் செலவில் செய்த விளம்பரங்களிலும் பார்க்க யானை  தன் தலையில் தானே மண் அள்ளி போட்டது போல விஜய்க்கு ஆளும் தரப்பால கொடுத்த நெருக்கடிகளே மிகப்பெரிய விளம்பரங்களாக அமைந்துவிட்டது. விஜய் என்ற தனிமனிதன் மீது அவர் சக்திக்கும் மிஞ்சிய கூட்டத்தால் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளால் விஜய் மீது மக்கள் அனுதாபமும் அதிகரித்தது என்றால் மிகையல்ல. இதனால் காவலன் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. தை பொங்கலுக்கு ரிலீசகுமோ என்ற கேள்விக்குறியுடன் கிடந்த காவலனை தன் முயற்சியாலும் ரசிகர்களின்  ஆதரவோடும் வெளியிட்டு ஆளும் தரப்பு முகத்தில் ஆச்சரிய குறியை ஏற்படுத்திவிட்டார் விஜய்.

காவலன் கதை ஒன்றும் தமிழ் சினிமாவுக்கு புதியது அல்ல. காதல் கோட்டை துள்ளாத மனமும் துள்ளும் என்று பல படங்களின் நகல் தான். என்றாலும் இறுதி இருபது நிமிட கதையே  சற்று வேறு பட்டது. மற்றும் விஜயின் நடிப்பு ஒரு பிளஸ் போயின்ட். இவ்வாறு சுமாரான கதையே கொண்ட காவலனை இலவச விளம்பரப்படுத்தி வெற்றி அடைய வைத்த பெருமை  ஆளும் தரப்பையே சாரும். சும்மா விட்டிருந்தால் கூட இப்படி ஒரு பெரு வெற்றி கொடுத்திருக்குமா என்பது கேள்வி குறி தான்!



அன்று விஜய் காங்கிரசை சந்தித்தது ஒன்றும் ஆளும் தரப்பால் பயப்பட வேண்டிய விடயம் அல்ல!  காரணம் தமிழ் மக்களின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் கட்சியில் விஜய் இனைய மாட்டார் என்பது  சாதாரண அரசியல் ஆர்வலனாலே 90 % கணிக்க கூடியது. ஆனால் அரசியல் சாணக்கியர்  முதல்வரால்  இதை கணிக்க முடியாதது மட்டும் அல்லாது மக்கள் பலம் கொண்ட ஒரு நடிகன் மீது கொடுக்கும் அழுத்தங்கள் பிற்காலத்தில் எந்த வித தாக்கங்களை கொடுக்கும் என்பதை  m g r காலத்திலே உணர்ந்தவரால் கணிக்க முடியாமல் போனது  ஆச்சரியம் தான். இப்பொழுது தன் வாரிசு அரசியலுக்கு எதிராக  முன்னர் விஜயகாந் போல தற்பொழுது விஜயை கிளப்பி விட்டுள்ளார். கலைஞருக்கு கூஜா தூக்கியே பழகிப்போன திரைத்துறையில் இருந்து ஒரு முன்னணி நடிகர் எதிர்த்து கிளம்பி இருப்பது நல்ல விடயம் தான். (அதுக்காக ஜெயா மேடத்துக்கு கூஜா தூக்குவது தான் சகிக்க முடியல!)

இர்பான் பதான் - புறக்கணிக்கப்படும் திறமை.

                                                                                                                         கிரிக்கெட்டை  பொறுத்தவரை ஒரு அணிக்கு சிறந்த சகலதுறை வீரர் கிடைப்பது என்பது அவ்வணி பெற்ற பாக்கியம் என்றே கூறலாம்.  அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது பந்து வீச்சிலும் சரி துடுப்பாட்டத்திலும் சரி திடீரென பிரகாசித்து எதிரணிக்கு  நெருக்கடி கொடுப்பதில் சகலதுறை வீரரின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

இந்திய அணியை பொறுத்தவரை கபில் தேவ் என்ற சிறந்த சகலதுறை வீரரின் ஓய்வுக்கு பின்னர் (94 /95  ) கடந்த ஒரு தசாப்தமாக சகலதுறை வீரர் ஒரு எட்டா கனியாகவே இருந்தது.சேவாக் யுவராஜ் போன்ற வீரர்கள் இருந்தாலும் இவர்களை சகலதுறை வீரர்கள் என்று சொல்லுவதை விட பகுதி நேர பந்து வீச்சாளர்கள் என்று சொல்வதே பொருத்தமானது. இந்த நேரத்தில் தான் இர்பான் பதானின் பிரவேசம் இடம் பெற்றது.



2004 ம் ஆண்டு போடர் கவாஸ்கர்  கிண்ண டெஸ்ட்  தொடர் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்று கொண்டிருந்தது.முதல் போட்டியில் விளையாடிய  சகீர்கான் காயம் அடைய இரண்டாவது போட்டியில் பத்தொன்பதே வயசயான பதான் பதினொருவர் அணிக்குள் உள்வாங்க படுகிறார்.அந்த போட்டியில் பெரிதாக முத்திரை பதிக்காவிட்டாலும் அசுர பலம் கொண்ட அவுஸ்ரேலிய அணியை அதன் குகைக்குள்ளே சந்தித்து தன் கன்னி  போட்டியில்  பந்து வீசினார்.அந்த போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார் அதுவும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மத்யு கெய்டன். எனினும் மூன்றாவது போட்டியில் சகீர் அணிக்குள் வர மீண்டும்  நான்காவது  போட்டியில் பதான் அணிக்குள் வருகிறார். அந்த போட்டியிலே சிறப்பாக பந்து வீசிய பதான், கில்கிறிஸ்ட்டை கிளீன் போல்ட் ஆக்கி    பாண்டிங் மற்றும் அன்றைய ஜாம்பவான் ஸ்டீ வாக்  ஆகிய  முக்கிய தலைகளின் விக்கெட்டை கைப்பற்றி பிரகாசித்தார். பின்னர் இடம்பெற்ற ஒருநாள் போட்டியிலும் அணியில் இடம் பிடித்து சிறப்பாக செயற்பட்டார்.இதன் மூலம் அவர் ஒரு பந்து வீச்சாளராக அணியில் நிரந்தர இடத்தை பெற தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார்.

இதன்  பின்னர்  இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக நீண்ட காலத்துக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று முத்திரை பதிக்க பதானின் பங்களிப்பு மிக  முக்கியமாக இருந்தது. இந்திய அணி பாகிஸ்தான் சென்ற சமயம் அன்றைய பாகிஸ்தான் பயிற்றிவிப்பாளராக இருந்த ஜாவிட் மியான்டாட் பதானின் திறமையை பற்றி "ஆளை பார்த்தால் அழகு செயலை பார்த்தால் இழிவு" என்று அவருக்கே உரிய திமிரில்  மிக இளக்காரமாக சொல்லியிருந்தார், எனினும் அந்த தொடர்களிலே பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி அவரின் முகத்தில் கரி பூசினார்.

 ஒரு பந்துவீச்சாளர் வேகமாக பந்து வீசுவதை விட விவேகமாக பந்து வீசுவதே துடுப்பாட்ட வீரருக்கு அதிக நெருக்கடியை கொடுக்கும்  அந்த வகையில் பதானின் பந்து வீச்சு நுணுக்கங்கள் சிறப்பாக உள்ளது  எதிர்காலத்தில்   சிறந்த பந்துவீச்சாளராக வரக்கூடிய எல்லா தகமையும் இவரிடம் இருக்கிறது  என்று வாசிம் அக்ரம் பதானின் திறமைக்கு  அங்கீகாரம் கொடுத்தார்.

பதானின் துடுப்பாட்ட திறமையும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடர்களிலே சிறப்பாக இருந்தது.அதன் பின்னர் பல்வேறுபோட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தார். தனது 21 வது வயசில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலே தனது முதல் ஓவரில் கட்றிக் விக்கெட் வீழ்த்திய பெருமையும் இவரையே சாரும் அதுவும் முக்கிய மூன்று தலைகளை வீழ்த்தி கட்றிக்கை பெற்றிருந்தார். (சல்மான் பட், யூனிஸ்கான், யூசுப் யுகானா)
ஒரு பந்துவீச்சாளரின் வெற்றி, பந்துவீசும் போது பந்து எந்த பக்கம் ஸ்விங் ஆகும்  என்றதை துடுப்பாட்ட வீரர் அறியா வண்ணம் வீசுவது தான். இவ்வாறு வீசுவதில் பதான் கில்லாடி ஆரம்ப காலங்களில் பதானின் பந்து வீச்சை கணித்து விளையாட மிகவும் திணறிய வீரர் என்றால் அது யூசுப் யுகானா தான் முக்கியமானவர்.



ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 70 பந்துகளில் நான்கு சிக்ஸ்சர்கள்  உடன்  எடுத்த 83 ஓட்டங்கள் இவரின் ஒருநாள் தொடரின் அதிக பட்ச ஓட்டம் ஆகும்.   இதே போல டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சத்தமும் பெற்றுள்ளார்.


எனினும் 2006 ம் ஆண்டும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக ஆபிரிக்க  மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்படாத காரணத்தால்  நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் இவருக்கு அணியில் நிரந்தரமாக ஒரு இடம் மறுக்கப்பட்டது. அணிக்குள் போவதும் வருவதுமாக இருந்தார். 2007 உலக கிண்ண அணியில் இடம்பெற்ற  இவருக்கு ஒரு போட்டியில் தானும் விளையாட அனுமதி
கொடுக்கவில்லை. ஒரு தொடரில் சிறப்பாக ஆடவில்லை என்றதற்காக அணியில் இருந்து முற்றாக புறக்கணிப்பது  நியாயம் இல்லை. அந்த வீரரை ஊக்கப்படுத்துவதே அணி நிர்வாகத்தின் கடமை. உதாரணமாக இங்கிலாந்தின் அன்று பிளிங்டோவ் 1998 களிலே அறிமுகமாகி 2002 வரை அநேக தருணங்களில் மோசமாகவே விளையாடினார். அது வரை துடுப்பாட்ட சராசரி 18 % பந்து வீச்சு சராசரி 47 % இருந்து எனினும் தேர்வுக்குழு அவரை முற்றாக புறக்கணிக்கவில்லை. அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து ஊக்கப்படுத்தினார்கள். அதன் பலனாக  2002 களின்  பின்னரே அசுர வளர்ச்சி கண்டார். பல்வேறு போட்டிகளில் இங்கிலாந்தின் முதுகெலும்பாக இருந்துள்ளார்.

 2008 இல் அவுஸ்ரேலியாவுக்கு  எதிராக நடை பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியிலே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி  46 ஓட்டங்களை பெற்று  மீண்டும் தன்  திறமையை நிருபித்தார் இர்பான். இக் காலப்பகுதியிலே பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட்போட்டியிலும்  தன் கன்னி சத்தத்தை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2009 பெப்ரவரியில் இலங்கையில் நடைபெற்ற T20   போட்டியிலே தோல்வி நோக்கி சென்றுகொண்டு இருந்த அணியை தன் சகோதரர் யூசுப் பதானுடன் இணைந்து அதிரடியாக ஆடி வெற்றி பெறச்செய்தார். இதில் இவர் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதே போல  ஐ பி ல் போட்டிகளிலும் சிறப்பாகவே  செயல்ப்பட்டார் எனினும் இவரின் துரதிஸ்டம் பஞ்சாப்  அணியில் சென்று மாட்டிக்கொண்டார்.

 2007 இல் நடந்த முதலாவது  T20 போட்டியிலே இந்திய அணி சாம்பியனாக இவரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. அதுவும் இறுதி போட்டியிலே பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயற்பட்டு அணிக்கு கோப்பையை பெற்று  கொடுக்க முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன்  விருதையும் தட்டி சென்றார்.

இவ்வாறு தொடர்ச்சியாக தன் திறமையை வெளிக்காட்டி வந்த போதும் அணியில் இவருக்கு இடம் கொடுக்காமை  மிகவும் துரதிஸ்ரமானதே.
சமீபகாலமாக அணியிலே அட்டை  போல  ஒட்டி திரியும் ரவீந்திர ஜடேயவை விட பல மடங்கு திறமையானவர் இர்பான் பதான். அத்தோடு அறிமுகமானதில் இருந்தே எந்த வித முன்னேற்றமும் இல்லாது விளையாடி வரும் சிறீசாந்த்,இசாந்த் சர்மா போன்றவர்களுக்கு கூட அணியில் தொடர்ச்சியாக  இடம் கொடுக்கப்பட்டு வரும் வேளையில்  திறமை இருந்தும் இவருக்கு வாய்ப்பு அளிக்காது புறக்கணிக்கிறமை சந்தேகத்தையே வர வைக்கிறது. அதே சமயம் இந்த உலக கிண்ண அணி தேர்வின் போது   20 பேர் கொண்டு அறிவிக்கப்பட்ட பட்டியலில் கூட  இவரின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



எனினும் இவ்வருடம் இடம்பெற்ற I P L  க்கான வீரர்கள் தேர்வில் இந்திய அணியில் தற்போது உள்ள  பந்து வீச்சாளர்களை காட்டிலும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது  இவரின் திறமைக்கான அங்கீகாரமே. ஆகவே எதிர்காலத்தில் மிக சிறந்த ஒரு சகலதுறை வீரராக வரக்கூடிய ஒரு திறமையான இளம் வீரரை வீணடிப்பது இந்திய அணிக்கே பாரிய  இழப்பு. இவ்வாறு திறமையான வீரர்களை ஊக்குவிக்காது, கடந்த பத்து வருடங்களாக வேகப்பந்து  வீச்சிலே சகீர்கானை மட்டுமே பெரிதளவும் நம்பி இருக்கும் இந்தியா சகீரின் ஓய்வுக்கு பின்னர் மிகப்பெரிய வெற்றிடத்தை எதிர்கொள்ளும் என்பது மட்டும் உண்மை.

மதத்தால் "மதம்" கொள்ளும் மனிதர்கள்.

                                                                                                                                        எத்தனையோ கிளைகளாக  பிரிந்து  பாய்ந்தாலும் இறுதியில் கடலிலே ஒன்றாக    கலக்கும் நதிகள்  போல இந்த உலகிலே பல்வேறு  மதங்கள் இருந்தாலும் அத்தனையும் நல்லதையே சொல்கிறன. தீயதை சொல்வதென்றால் மதங்கள் எதற்கு. ஆனால் மனிதன் தன் சுயநலன்களையும்,மனதில் தோன்றும்  மூட நம்பிக்கைகளையும் அதிலே புகுத்தி தன் தலைக்கு ஏற்ப  தொப்பியை மாற்றிக்கொள்வது  போல  தன்  மனதில் தோன்றும் சுய நலம், வக்கிரம்,சந்தர்ப்பவாதம்  போன்ற  இயல்புகளுக்கு ஏற்ப மதங்களையும் மாற்றி அதனுள்ளே மூட நம்பிக்கைகளை புகுத்தி அதை எல்லோரையும் ஏற்க வைக்க எண்ணுகிறான். சில சமயங்களில் மனித குலத்துக்கு மிக விரோதமான செயல்களையும் மதம் என்ற போர்வை போர்த்தி தான் வணங்கும் கடவுள்களை சாட்சியாக வைத்து  சர்வ சாதாரணமாக அரங்கேற்றி விடுகிறார்.

மதங்களில் மூட நம்பிக்கைகள் புகுத்தப்படுகிறது என்று நான் சொல்கிறேன், மதமே ஒரு மூட நம்பிக்கை தான் என்பது ஒரு நாஸ்தீகனின் வாதமாக இருக்கும். மதம் மனிதன் வாழ்வுக்கு அவசியமான அறநெறிகளை வழிகாட்டுவதாகவே இருக்க வேண்டுமே ஒழிய வன்முறைகளை அல்ல. என்னை பொறுத்தவரை எல்லா மதமும் ஒன்றே. அத்தோடு இந்த மதங்களின் பெயரால் செய்யப்படும் மூட பழக்கங்களுக்கு எதிரானவன்.  இன்று மதம் என்ற பெயரில் என்ன நடக்கிறது?

உதாரணமாக கோவில்களிலே வேள்வி என்ற பெயரில் ஆடுகளை வெட்டுவது என்ற காணொளி சமீபத்தில் பரவியது. எந்த மதமும் கொலையை அனுமதிக்கவில்லை. ஆனால் கடவுளின் பெயரால் கோவில்களில் உயிர் பலி நடக்கிற காரணம் தான் இது வரை எனக்கு புரியவில்லை. மாமிசம் உண்டுவிட்டு கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கும் சைவசமயத்தவர்கள்  இந்த உயிர்  பலிகளை எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பது மிக வேடிக்கை மட்டும் இல்லாமல் இதை பற்றி சிந்திப்பவர்களை  மதம், கடவுள் போன்ற நம்பிக்கைகளை முற்றாக இல்லாது ஒழித்துவிடுகிறது .

இந்து மதத்தில் மட்டும் அல்ல ,எல்லா மதங்களிலும் இந்த வன்மங்கள் புகுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக சமீபத்தில் தலிபான்கள்   வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக பெண்ணின் மூக்கை அறுத்தது எறிந்தார்கள்.அதே போல  சிறிது நாட்க்களுக்கு முன்  தப்பான உறவு வைத்திருந்தார்கள் என்பதற்காக, இது தம் மதத்துக்கு எதிரானது என்று கூறி  இருவரை நிற்க  விட்டு கல்லால் எறிந்து கொன்றுள்ளார்கள்.  இதை போல  மதம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான வன்மங்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மிக அதிகம்.

சமீபத்தில் பார்ப்பவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்ஒன்று, மதம் என்ற போர்வையில்  நிகழ்ந்தேறியுள்ளது.  கென்யா நாட்டில் "சீசி" என்ற இனத்தை சேர்ந்த சில பேர் சூனியக்காரர்களாக   அடையாளம் காணப்பட்டு அப்பகுதியில் உள்ள சிலரால் மக்கள் முன் பார்த்து நிற்க நடு ரோட்டில் போட்டு உயிருடன் கொளுத்தப்பட்டுள்ளார்கள்.இதற்கு காரணம் அந்த சூனியக்காரிகள் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் ஆபிரிக்க கிறிஸ்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதாவது மதம் என்ற பெயரில் மனித குலத்துக்கு எதிரான இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார்கள். இதற்கு முன்னரும்  கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர்கள் என்று இவ்வாறு ஆயிரக்கணக்கான சூனியக்காரிகள் உயிருடன் கொளுத்தப்பட்டாலும் தற்சமயம் காணொளி வடிவில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



(காணொளி மிக கொடூரமானது)

யூதர்கள் ஜேசுவை சிலுவையில் தான் அறைந்தார்கள். ஆனால் இவர்கள் ஜேசுவின் பெயரால் மனிதர்களை உயிரோடு கொளுத்துகிறார்கள்.  மதங்கள் இப்படிப்பட்ட மனித குலத்துக்கு எதிரான வன்மங்களை தான் சொல்கிறன என்றால் அந்த மதங்கள் நமக்கு எதற்கு. மனிதன் வாழ்வுக்கு இந்த மதங்கள் எந்த வகையில் உதவுப்போகிறது!

சில கேள்விகள்..!

                                                     


ஊடகங்கள் மிக முக்கிய சாதனமாக இருக்கும் இக்காககட்டத்தில்  என்றுமிலாதவாறு இணையத்தளங்களிலே  மீனவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கருத்துக்களும் செய்திகளுமாக பெரும் எழுச்சி தோன்றியுள்ளது சந்தோசமான விடயம்.இத்தோடு இது அணைந்துவிடாமல் சம்மந்தப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடரவேண்டும்.
 ஆனால் பாதிக்கபடுபவர்களுக்காக பொதுவில் யாரும் உரத்து குரல் கொடுப்பதாக தெரியவில்லை. அதிலும்  இந்த முன்னணி சினிமா நடிகர்கள் யாருமே  பாதிக்கப்படும் மீனவனுக்காக குரல் உயர்த்தவில்லையே! ஏன்? அந்த மீனவர்களில் பிரபல சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் இல்லையா? அல்லது அவர்கள் திரையரங்கு சென்று ரிக்கட் எடுத்து சினிமா பார்ப்பதில்லையா?

---------------------------------------------------------------------------------------------------------- 



ஆன்மீகவாதி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றிய நித்தியானந்தா (ஆ)சாமி புகழ் ரஞ்சிதா,  சமீபத்தில் பொங்கலூரில் உள்ள  மக்கள் நல சங்கத்தில்  வைத்து மக்களுக்கு இலவச சேலை வழங்கியுள்ளார் .   மக்களும் அதை மறுக்காமல் வாங்கியுள்ளார்களே! இன்னமுமா இவர்கள் இந்த  கூட்டத்தை  நம்புகிறார்கள்! இல்லை இலவசம் என்றவுடன் எல்லாவற்றையுமே மறந்துவிடுகிறார்களா? மக்களின் இந்த நடவடிக்கையே ஏமாற்றுபவனை ஊக்குவிப்பதாக அமைந்துவிடுகிறது. இதிலே ஒரு ஆச்சி ரஞ்சிதாவின் உச்சம் தலையில் இருந்து உள்ளம் கால் வரை வருடி நலம் விசாரித்தாவம். இப்பிடி ஏமாறுவதற்கென்றே   மக்கள் இருக்கிறார்களே! இது ஏமாற்றுபவன் சாதனையா இல்லை ஏமாறுபவன் சாபமா?         

------------------------------------------------------------------------------------------------------------


           இலங்கை ஜனாதிபதி  மகிந்த ராஜபச்சேவுக்கு புற்றுநோய் என்று பரவலாக ஊடகங்களால் செய்தி பரப்பப்படுகிறதே! அதுவும் அமெரிக்கா சென்றுள்ள சமயம் இந்த செய்தி பரவுகிறதே இதிலும்  ஏதாவது உள்குத்து இருக்குமோ;-)