நீங்கள் வெளி இடங்களிலே இணையம் பயன்படுத்துகிறநீர்களா ?

  இப்பொழுது எல்லாம் அநேகமான இணையதளங்களை  திறக்க பயனர் கணக்கு அவசியம்.ஆகவே நீங்கள் செந்தமாக கணணி வைத்து பாவிக்கிரநீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் வந்து விட போவதில்லை.நீங்கள் உங்கள் வங்கி கணக்கு மற்றும் உங்கள் தனிநபர் கணக்குகள் சம்மந்தமாக தகவல்களை பெற,வழங்க,சரி பார்க்க பொது இடத்தில் உள்ள கணணியை பாவிப்பீர்களாக இருந்தால் அதற்காக உங்கள் password கொடுத்து  பயனர் கணக்கை திறந்திருப்பீர்கள்.சில சமயங்களில் உங்கள் password   கணணியிலே பதிந்துவிட (save ) வாய்ப்பு உள்ளது. இதை பயன்படுத்தி  பிறர்  உங்கள் பயனர் கணக்கை திறந்து மோசடிகள் செய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால் உங்கள் தனிப்பட்ட விடயங்கள்  மற்றும் உங்கள் வங்கி கணக்கு தொடர்பான பாதுகாப்பே கேள்விக்குறியாகி விடும்.  எனினும்  உங்கள் password கணனியில் பதிந்திருக்குமோ என்ற சந்தேகத்துடன் நீங்கள் சில சமயங்களில் history ஐ   delete செய்தால் சரி என்று எண்ணி அதை செய்திருப்பீர்கள்.ஆனாலும் இது உங்களுக்கு எந்த வித பயனையும் தரப்போவதில்லை. ஆகவே நீங்கள் கீழ் காணும் முறையை பின்பற்றுங்கள்,
  ( mozilla fire fox  )   

   
        
tools >options >security >saves passwords என்பதை click செய்யுங்கள்.அப்படி செய்ததும் ஒரு சிறு பெட்டிக்கும் மின்னஞ்சலுடன் password பதிவாகி இருந்திருக்கும். remove all என்பதை click செய்ததும் அனைத்து passwords களும் delete பன்னுப்பட்டுவிடும்.இனி நீங்கள் எந்த பயமும் இன்றி வீடு செல்லலாம்.

free registry cleaner

நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு சிறுவர்களோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .

நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.

ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம். தரவிறக்க
 
Free Registry Cleaner 4.20.9 freeware download

தேவையற்ற விளம்பரங்களை தடை செய்ய


இன்று  விளம்பரம் என்பது  நமது வாழ்க்கையில் ஒரு  அங்கமாக  மாறி விட்டது.வீதியால் செல்லும் போது காணும் இடம்  எல்லாம் விளம்பரம். தொலைக்காட்சி  பார்க்கும் போது சொல்லவே வேண்டாம். அதே போல இணயத்திலே இதன் தொல்லை அதிகம் எனலாம். நாம் ஒரு வலைத்தளத்தை  பார்க்க திறக்கும் போது அவ் வலைத்தலத்துடன் சேர்ந்து  பல்வேறு விளம்பரங்களும் தோன்றிவெறுப்பை கொடுக்கும். அதுவும் சிறுவர்கள்பார்க்க கூடாத விளம்பரங்களும் சில சமயங்களில் வந்திவிடும்.
முதலாவதாக  பாப் அப் வகை. இவை புதிய ஒரு விண்டோவில், நாம் பார்க்கும் இணைய தளங்களுக்கு மேலாக தோன்றுகின்றன.  எதிர்பார்க்காத நேரத்தில் வந்து, மறையாமல் அடம் பிடிக்கும்  இவற்றை அனைவருமே விரும்புவதில்லை. அடுத்த வகை சிறிய படங்களாக, தளங்களில் ஊடுறுவும் கட்டங்கள்.

இவற்றை தடுப்பதற்கு ஒருவழி உள்ளது. https://addons.mozilla.org/en-US/firefox/addon/1865/ என்னும் இந்த தளத்துக்கு சென்று ஆட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus) என்ற ஆட் ஆன் தொகுப்பினை, டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். இவை உங்களுக்கு 99 % பயனை தருகின்றன.


தொமஸ் அல்வா எடிசன்


தொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். மின்குமிழ்  மற்றும் புகைப்பட கருவி  இவருடைய கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமானதாகும். "மென்லோ பூங்காவின் மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.
                                        
எடிசனின்  ஆரம்ப வாழ்க்கை மிகவும் சோதனையானது பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்காததால், அவனை வாத்தியார் "அறிவீலி" என்று ஏசினார். இதனால்  ஆத்திரம்  அடைந்த இவர் தாயார்  எடிசனை பள்ளியிலிருந்து நிறுத்தி  வீட்டிலேயே பாடம் கற்றுத்தந்தார். எடிசன் சிறு வயதிலேயே, இயந்திர பொருட்களிலும், வேதியல் சோதனைகள் செய்வதிலும் ஆர்வம் கொண்டார். 12 வது வயதில் கிட்டத்தட்ட அவர் செவிப்புலனை இழந்தார். ஆனால் அவர் சிறிதும் மனம் தளரவில்லை. அந்த குறைபாட்டை ஒரு வரப்பிராசதமாக கருதினார். ஏனென்றால் இதனால் அவர் தன்னுடைய சோதனையிலும் ஆராய்ச்சியிலும் முழுமையாக ஈடுபட முடிந்தது.இதற்கிடையில் 1871 வருடம் தாயார் இறந்தார். அதே வருடம் கிருத்துமஸ் தினத்தன்று Mary Stilwell, என்பவரை மணந்தார். எடிசன் மனைவியை மிகவும் நேசித்தார். இருந்தபோதிலும் அவர்களுக்கிடையே உறவு அவ்வளவு நன்றாக இல்லை. ஏனென்றால்,எடிசன் எப்பொழுதும் தன் வேலையிலேயே ஈடுபட்டுயிருப்பார், மனைவி நிரந்தர நோயாளி. முதல் குழந்தை Marion பிப்ரவரி 1873 லும் அதன் பின் மகன் Thomas, Jr., ஜனவரி 1876 லும் பிறநதனர்.  எடிசன், குழந்தைகள் இருவருக்கும் டாட்; டாஷ் தந்தி சங்கேத மொழியில்("Dot" and "Dash," referring to telegraphic terms) செல்லப் பெயரிட்டார்( Nickname). அக்டோபர் 1878ல் மூன்றாவது குழந்தை William Leslie பிறந்தது.
                      
எடிசன் 1877ல் phonograph கண்டுபிடித்தார் வெள்ளீயம் பூசின உருளையில் முதன் முதலாக "Mary had a little lamb" என்று phonograph ல் பேசி தன்னுடைய குரலை பதிவு செய்தார். அந்த வார்த்தைகளை அந்த பொறி திரும்ப ஒலித்தது  இந்த கருவியை விற்பனை செய்ய 1878 The Edison Speaking Phonograph Company நிறுவப்பட்டது.  இதன் பிறகு எடிசனுடைய சிந்தனைகள்  வேறு கண்டுபிடிப்பில் திரும்பியது, அவருடைய கவனம் மின்சார விளக்குகள் பக்கம் திரும்பியது. நவம்பர் 15 1878 ல் The Edison Electric Light Co கம்பெனி நிறுவப்பட்டது. அதிகமாக விளக்குகள் தேவைப்பட்டதால், நிறைய கம்பெனிகள் எடிசன் பல இடங்களில் ஸ்தாபித்தார். 1881 பாரிஸ் நகரிலும், 1882ல் லண்டனிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாஸ்கோவில் czar யுடைய முடிசூட்டு விழாவிற்கு பிறகு, பல ஐரோப்பிய நாடுகளில் கம்பெனி நிறுவவேண்டியதாயிற்று.
                          
எடிசனின் மனைவி மேரி, மூளையில் ஏற்பட்ட கட்டியினால் 1894 ம் வருடம் ஆகஸ்ட் 8 ம் தேதி உயிர் துறந்தார். 1886 ம் வருடம் பிப்ரவரி 24 ம் தேதி Mina Miller என்னும் பெண்ணை மணம் புரிந்தார். 1920ம் வருடம் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், அவர் அதிகமாக தன் பொழுதை வீட்டிலேயே தன் மனைவியுடன் கழித்தார். எடிசனுடைய  நெருங்கிய  நணபர் ஹென்றி ஃப்போர்ட்(Henry Ford, ),எடிசனுடைய invention factory யை ஒரு மியூசியமாக மற்றினார். எடிசினுடைய மின்சார விளக்கின் 50 வது வருட உபயோகத்தின் ஞாபகார்த்தமாக மியூசியம் 1929ல் திறக்கப்பட்டது. அக்டோபர் 14ம் தேதி 1931 கோமாவில் படுத்த எடிசனின்  18ம்தேதி இவ்  உலகை விட்டு பிரிந்தார்.

update checker என்னும் ஒரு மென்பொருள்

இன்றைய தொழில் நுட்ப்ப உலகில்  புதுமையை புகுத்துவது என்பது சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது.கணணியை இயக்குவதற்கான மென்பொருட்களுக்கு இது இன்றியமையாததாகிவிட்டது. நீங்கள் உங்கள் கணனியில் அத்தியாவசியமான மென் பொருட்க்களையும் உங்களுக்கு அவசியம் எனக்கருதும் மென் பொருட்க்களையும் நிறுவி இருப்பிர்கள்.

அதே போல இந்த மென் பொருட்களை உருவாக்கிய நிறுவனங்கள் தங்கள் மென் பொருட்க்களை இன்னமும் மெருகூட்டும் வகையிலும் புதுமைகளை புகுத்தி புதிய பதிப்புக்களாக வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.எனினும் உங்கள் கணனியில் நீங்கள் நிறுவிய மென்பொருளுக்கு புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தால் அனேகமாக உங்களுக்கு அந்த தகவல் கிடைக்காமல் இருக்கலாம்.இந்த குறைபாட்டை நீக்கும் பொருட்டே வெளியான   update cheacker  என்னும் ஒரு சிறிய  மென்பொருள்.


           

இதன் சிறப்பு அம்சம் என்னவெனில்  உங்கள் கணனியில் உள்ள எனையே மென் பொருட்களுக்கு  புதிய பதிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தால் உடனுக்குடன் இது அறியத்தரும்.  இந்த மென்பொருளை நிறுவி வைப்பதற்கு உங்கள் கணனியில்  அதிக அளவு இடம் பிடிக்க போவதும் இல்லை  (247kp ). தரவிறக்க
 /http://www.filehippo.com/  (இந்த தளம் நீங்கள் உங்களுக்கு தேவையான வேறு மென் பொருட்க்களை download செய்ய சிறந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் காணப்படுகிறது)

மகாகவியார் பாடல்

 (தமிழக அரசால் புனரமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ள பாரதியார் பிறந்து வளர்ந்த வீடு - எட்டயபுரம்)

டி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? :

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபாரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார்
செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.
தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

”உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால்மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது பெட்எக்ஸ், இபே , கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இபே நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் இபே!

”உடனே மூன்று ப்ளூம் பாக்ஸ்களை அனுப்பி வையுங்க’ என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள். காரணம், இது எதிர்காலத் தொழில்நுட்பம். இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி/ தினமலர்  

இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browser


இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browser epic . (Hidden Reflex)    என்னும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி யூலை 14 அன்று வெளியிட்டு உள்ளது.இந்த பிரவுசர் fire fox ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ் உட்பட 12 பிற மொழிகளை நாம் பயன் படுத்தலாம்.

அத்தோடு இதன் சிறப்பு அம்சம் என்னவெனில்,இந்த பிரவுசருடன் இணைக்கப்பட்டுள்ள அன்டி வைரஸ் ஆகும். நாம் எந்த file ஐ  download செய்தாலும் பிரவுசரில் உள்ள அன்டி வைரஸில் scan செய்த பிறகே நம் கணனியில் ஏற்றப்படும்.  மற்றும்  இந்த பிரவுசரில் 1500 இறக்கும் மேற்ப்பட்ட wallpaper உள்ளது. நாம் இந்த பிரவுசரை  install பண்ணிய பிறகு எமக்கு பிடித்தது போல அழகுபடுத்துகொள்ளலாம். அத்தோடு இதன் இடது பக்கத்தில் ஓரமாக உள்ள கட்டத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. face book ,twitter ,writer ,gmail ,yahoo ,games மற்றும் பல (கிரிக்கெட் score கூட online இல் பார்க்கலாம்).  இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம். இன்னும் பல வசதிகள் உள்ளது. 

 நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வசதியுள்ளது என்ற காரணத்துக்காகவே இதை பாவிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. http://www.epicbrowser.com/                 

Megavideo வில் முழு திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?

அநேகமானோர் Megavideo என்னும் தளம் பற்றி அறிந்திரிப்பீர்கள்.திரைப்படங்களை online இல் பார்க்க ஒரு சிறந்த தளம் இது.திரை நல்ல தெளிவாகவும் இருக்கும்.ஆனால் இதில் நமக்கு உள்ள குறை ஒரு திரைப்படத்தை தொடர்ச்சியாக முழுமையாக பார்க்க முடிவதில்லை.அதாவது ஒரு நாளைக்கு 54 நிமிடங்கள்  மட்டுமே பார்க்க அனுமதி உண்டு.ஆவலுடன் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடை நடுவில் திரை நின்றதும் மிகவும் சலிப்பாக இருக்கும்.  எனினும் இக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு வழி உண்டு. முதலில் நீங்கள் megavideo வில் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் link ஐ  copy பண்ணி கொள்ளுங்கள்.அதன் பின்னர்  http://ezywatch.com/index.php   என்னும் ஒரு  தளத்தை திறந்து கொள்ளுங்கள்.

                              
அங்கே மேலே படத்தில் உள்ளது போல ஒரு தளம் வரும் . அதிலே  watch என்னும் எழுத்துக்கு முன்னால் உள்ள பெட்டிக்குள் நீங்கள் copy பண்ணிய              லிங்க் ஐ paste பண்ணி, watch ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய படத்தை இப்பொழுது தடை இன்றி முழுமையாக  பார்க்கலாம். எப்புடி எல்லாம்
கண்டுபிடிக்கிரான்கையா........   
     

GOOGLE புதிய இசைக்கான சேவை

புதுமைகளை புகுத்துவதில் கூகுலுக்கு நிகர்  கூகுலே.இந்திய இசை ரசிகர்களுக்காக GOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுல் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavn மற்றும் Saregama ஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது.
      70 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இப்போதைய எந்திரன் இந்தி பாடல்கள் வரை உள்ளது.இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான  சேவைகளை இன்னும் வழங்கவில்லை..மற்றும் தமிழ் பாடல்கள் குறைவாகவே உள்ளது.எதிர்காலத்தில் இவை நிவர்த்தி செய்ய படலாம் என்று எதிர்பார்க்கலாம்.  எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுல் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோமாக.
     இணையத்தள முகவரி 

இறை நம்பிக்கையும் இறை மறுப்பும்

கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய  நம்பிக்கை இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை இறைமறுப்பு ஆகும். வடமொழியில் இதை நாத்திகம் என்றும் ஆங்கிலத்தில் இதை ஏத்திசம் (Atheism) என்றும் குறிப்பிடுவர். சமய நம்பிக்கை போன்றே இந்த கொள்கையும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

தமிழ்ச் சூழலில் இறைமறுப்பு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. பண்டைக்காலத்தில் உலகாயுதர் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள். முக்கியமாக தந்தை பெரியாரை குறிப்பிடலாம்.  ( ஈ. வெ. ராமசாமி) இவரால் தோற்றுவித்து தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை இறைமறுப்பு கொள்கை உடையன. மார்க்சிய அல்லது இடதுசாரி நிலைப்பாடுகள் உடைய பலரும் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள்.

உலகில் எத்தனை பேர் இறைமறுப்பாளர் என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். தொடர்புள்ள இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், ஐயுறவுக்கொள்கை கொள்கைள் உடையோர் எல்லோரும் இறைமறுப்பாளர் என்ற வகைக்குள் வரார். இறைமறுப்பு பல நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது, மரணதண்டனைக்கும் உரியது எனவே வெளிப்படையாக இறைமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்வது சிக்கலாக இருக்கும். உலகில் 12-15 % மக்கள் இறைமறுப்பாளர்கள் எனப்படுகிறது. எனினும் இந்த எண்ணிக்கை இதவிடக் கூடுதலாக இருக்கும். ஐக்கிய அமெரிக்க அறிவியாளர்களில் பெரும்பான்யானோர் (93%) சமய நம்பிக்கை அற்றோர் எனபதும் குறிப்பிடத்தக்கது.

microsoft தரும் இலவச ஆன்டிவைரஸ்.



கணனிகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை வைரஸ் தாக்கம் .நாங்களும் எப்படி தான் கணணியை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில சமயங்களில் எமக்கு தெரியாமலே நாம் நிறுவியுள்ள ஆன்டிவைரசுகளையும் மீறி  எமது கணணிக்குள்  புகுந்து கணணியை  முடக்கிவிடும்.

ஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய

 கணினி இல்லாமல் எதுவும் இல்லை என்று உள்ள இந்த காலக்கட்டத்தில் தினம் தினம் புது புது வைரஸ்கள் உருவாகி நம் கணினியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இந்த வைரஸ்களை தடுக்க எவ்வளவு ஆன்டிவைரஸ்கள் உள்ளன. இதில் என்ன பிரச்சினை என்றால் ஒவ்வொரு ஆன்ட்டிவைரசும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்ததாக உள்ளது. ஆகையால் நம் பைலை எப்படி ஒரே நேரத்தில் 15+ ஆன்ட்டிவைரசில் ஸ்கேன் செய்வது என்று காணலாம்.

 ஆனால் நம் கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட  ஆன்டிவைரஸ் நிறுவ சில நிறுவனங்கள் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் நாம் ஒரே ஒரு ஆன்டிவைரஸ் மட்டுமே நம் கணினியில் நிறுவ முடிகிறது. ஆகையால் ஒரு ஆன்டிவைரசில் மட்டுமே நம் பைல்களை ஸ்கேன் செய்து வந்தோம்.                

                                                                                                                                                                                                                                                                                         
  •  குறிப்பாக நமக்கு இமெயில் வரும் பைல்கள் நம்பக தன்மை வாய்ந்ததா என்று இந்த     முறையில் அறிந்து கொள்ளலாம்.
  • இந்த குறையை போக்க நமக்கு இந்த தளம் உதவுகிறது. இந்த தளம் சென்றவுடன் உங்களக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
     
  1. மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உள்ள Choose file என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  2. உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்ய விரும்பும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  3. அடுத்து அதற்கு கீழே உள்ள Submit file என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த பைல் வைரஸ் ஸ்கேன் ஆகி ஒவ்வொரு ஆன்டி வைரசிற்கு நேராக அதான் முடிவுகள் வரும்.

மேலே படத்தில் உள்ளதை போல அனைத்து ஆன்டிவைரசிலும் Found nothing என்று முடிவு வந்தால் உங்கள் பைல் 100% பாதுகாப்பாக உள்ளது. நீங்கள் இந்த பைலை தைரியமாக உபயோக படுத்தி கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் கிளிக் http://virusscan.jotti.org/enசெய்யவும்


இளமையில் "கல்"



இதை தான் சொன்னார்களா இளமையில் "கல்" என்று.என்ன தான் நாடுகள் தொழில் நுட்ப்பம், ஆராச்சி என்று சென்றுகொண்டு இருந்தாலும் இன்று உலகத்தில் உள்ள மிகப்பெரிய மனிதாபிமான பிரச்சனை வறுமை.கையில் புத்தகத்துடன் பாடசாலை செல்ல வேண்டிய சிறுவர்கள்அதே கைகளில் ஆயுதங்களுடன் தொழிலுக்கு புறப்படுகிறார்கள்.

கூகுளின் மற்றும் ஒரு வசதி

கூகுளின் மற்றும் ஒரு வசதி ,அதாவது ஆங்கிலத்தில்   கடிதமோ கட்டுரையோ எழுதும் போது அநேகமானோர் எழுத்துப்பிழை(spelling mistake ) விடுவது சகயமே.இனி உங்களுக்கு அந்த  கவலை வேண்டாம்.இந்த குறையை தீர்க்க கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு வசதியே google scribe

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி  ஐந்து விக்கற்றுக்களால் வெற்றி பெற்றுள்ளது.முதலில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று இந்திய அணி  அவுஸ்ரேலியாவுக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது.அதன் படி அவுஸ்ரேலிய அணி சார்பாக

புகைப்படங்களை பெயர் கொடுத்து ஒழுங்கமைப்பது எப்படி ..?


 டிஜிட்டல் கேமராவிலிருந்து அல்லது கைபேசியில் இருந்தோ  படங்களை ட்வுன்லோட் செய்யும்போது அவற்றின் பெயர்கள் அனேகமாக உங்களால் புரிந்து கொள்ள முடியாத பெயர்களாக இருக்கும்.அந்த பைல்களின் பெயர்களை (File Name) நீங்கள் விரும்பியபடி மாற்றிக் கொள்ள நினைத்தால் ஒவ்வொன்றாக மாற்றாமல் ஒரே முறையில் எல்லா பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளும் வ்சதியை  விண்டோஸ் தருகிறது.

இந்த வசதி மூலம் படங்கள் மட்டுமன்றி எந்த வகையான பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

படங்கள் உள்ள போல்டரைத் திறந்து பெயரை மாற்ற வேண்டிய படங்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள் பெயரை மாற்ற வேண்டிய படங்கள் அருகருகே இல்லாமல் வேவ்வேறு இடங்களில் இருக்குமாயின் Ctrl விசையை அழுத்தியவாறு படங்கள் மீது க்ளிக் செய்யுங்கள். 

அடுத்து File மெனுவில் அல்லது ரைட் க்ளிக் செய்து Rename தெரிவு செய்யுங்கள். பின்னர் அந்த பைலுக்குப் புதிய பெயரை டைப் செய்து Enter கீயை அழுத்துங்கள். நீங்கள் தெரிவு செய்த பைல்கள் அனைத்தும் வழங்கிய புதிய பெயரோடும் ஒரு தொடரிலக்கத்துடனும் மாறியிருக்கக் காண்லாம்.
உதாரணமாக முதல் பைலுக்கு beach (1 ) என வழங்கும்போது அடுத்த் பைல்கள் beach (2 ) என்றும் அடுத்தது beach ( 3 )என்றும் மாற்றமடையும்.

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?.

   

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க. இன்று கணணி , இணையம் இல்லை என்றால் வேலை எதுவும் ஓடாது என்பது போல நம் வாழ்வில் அவசியமான சாதனமாக மாறிவருகிறது.
 

இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை  இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திரு...ந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி  delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.