காலில் விழுவதும் கட்டிப்பிடிப்பதும் - கலாச்சாரம்.. !

எனக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம். மனித உடலிலே ஏனைய பாகங்களை போலவே கால் என்பதும்  ஒரு உறுப்பு.  அப்பிடி இருக்க காலில் விழுவதென்பது எதை குறிக்கும்!!!  அடிமை தனமா!!

ஆசி பெறுவதற்காக காலில் விழுவார்கள்! என்று  தான் நான் அறிந்திருக்கிறேன், பொதுவான கருத்தும் கூட.  ஆனால் அதுவே இன்று ஆதிக்க சக்திகளின் அடையாள சின்னமாக மாறிவிட்டது.  ஒருவருக்கு தமது அதி தீவிர விசுவாசத்தை காட்டுவதற்காய்  அவரின் காலில் விழும் கலாச்சாரம் நம்மவர்களில் உண்டு. இதுவும் ஒரு சுயநலம் தான். அனேகமாக இந்த பழக்கம் தமிழர்களிடம் தான் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.


எமது காலில் விழும் கலாச்சாரம் போல மேலைத்திய நாட்டவர்களிடையே கட்டிப்பிடி கலாச்சாரம் என்ற ஒன்று உள்ளது.  ஆசி பெறுவது என்று சொன்னாலும்  இல்லை தமது அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் நாகரிகாமாக இவ்வாறு செய்துகொள்வார்கள். ஆனால் காதலர்கள் கட்டி கொள்வதற்கும் அன்பின் நிமிர்த்தம் இருவர் கட்டி பிடிப்பதற்கும் அதி வேறுபாடு உள்ளது ;-)  அதோடு  இவர்களில் உள்ள நல்ல பழக்கம்  வர்க்க வேறுபாடு இல்லாது  தமது  அன்பை இவ்வாறு பரிமாறிக்கொள்வார்கள். நான் அறிந்தவரை அநேகமான மேலைத்தேய நாடுகளில் உள்ளது  இரண்டே சாதி.  ஒன்று உழைக்கும் வர்க்கம் மற்றையது சோம்பேறி கூட்டம். அதனால்  தான் ஒரு நகரத்திலே இருபது இனத்தவர்கள் வசித்தாலும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.




என்னை பொறுத்தவரை ஆசிரியர்கள் காலில் விழுவது கூட விரும்பத்தகாதது என்றே நினைக்கிறேன்.

பாடசாலை பருவத்தின் இறுதி நாட்களில்  எம் இறுதி பரீட்சைக்கு போக முன் நமது  அதிபர் சொன்னார்   "உங்களுக்கு கற்ப்பித்த  எல்லா ஆசிரியர்கள் காலில்  வீழ்ந்து  ஆசிர்வாதம்  வாங்குங்கள்"  என்று,  நாமும் சென்றோம்...  அநேகமான ஆசிரியர்கள் "வா வந்து விழு"  என்று  அர்த்தப்பட  நாம் அருகில் போக  முன்னரே  தாம்  எம் முன்வந்து  நின்றார்கள்;  கூடவே    தனது நண்பனுக்காக மாணவியிடம் லவ் லெட்டர் கொடுத்த வாத்தியார் உட்பட!   ஆனால்   ஓரிரு   ஆசிரியர்கள்   மட்டும்  "நான் ஒன்றும் பெரிய மனிதர்  இல்ல இதெல்லாம் தேவையற்றது"  என்று  சொல்லி  நாம் அவர்கள் அருகில் போக  முன்னரே விலகி  சென்று விட்டார்கள்.  இதை தான் சொல்வார்களோ  "நிறைகுடம் தளம்பாது என்று!"  உண்மையிலே அவர்கள் மீது  மட்டும் அன்று ஒரு படி மரியாதை கூடி விட்டது.  இதில் ஒருவர் எம் கூட நண்பராக பழகிய பாடசாலை உதவியாளர் (பியூன்)..



 ஒரு மகன் தன் பெற்றோர் காலிலோ இல்லை தன வீட்டு  மூதாதையர் காலிலோ விழுவதை ஏற்றுக்கொள்ளலாம்.  காரணம் பெற்றோர் எப்பொழுதும் தமது பிள்ளைகளுக்கு நல்லதையே நினைப்பார்கள். அது நடைமுறையில் உள்ளதும் கூட..  ஆனால் ஏனையவற்றை சகித்துக்கொள்ள முடியாது,
காலில் வீழ்பவனும்  மனிதன் காலில் வீழப்படுபவனும் மனிதன் அப்படி இருக்க ஏன் இந்த பாகுபாடுகள்? புரியவில்லை!  ஏனெனில்  இன்று  அது  எவ்வாறு வழக்கத்துக்கு வந்துள்ளது.  மேல் சாதிக்காரன் என்று கருதப்படுபவன் காலில் கீழ் சாதிக்காரன்  விழுவது.  அரசியல்வாதி  காலில் தொண்டன்   விழுவதும்.  நடிகர்கள்  காலில்  ரசிகன்   விழுவதுமாக  காலில் விழுவதை அடிமையின் சின்னமாகவே  மாற்றிவிட்டார்கள்.  

சாய்பாபா மீண்டும் அவதரிப்பார் !

இறந்தவர்களை பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பதென்பது  மனிதாபிமான ரீதியிலும் நம் மரபுகளின் ரீதியிலும் சரியான செயல் அல்ல. அது போல ஒருவரின் இறப்பிலே சந்தோசப்படுபவனும் மனிதன்  அல்ல. என்னை பொறுத்தவரை சாய் பாபா என்பவர் இந்த பூமியில் பிறந்து இயற்கையின்  நியதியால் இறந்து போன கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவரே.

நான் ஒன்றும் நாஸ்தீகன் அல்ல. உங்களுக்கு தெரியும் கிராம புறங்களிலே உள்ள மக்கள் ஒப்பீட்டளவில் கடவுள் நம்பிக்கை கூடியவர்கள். அதே கிராமப்புறம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்  நான். இது வரை நான் வாழ்ந்த சூழலிலே ஒரு நாஷ்தீகர்களை கூட கண்டதில்லை.



நான் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலே எனக்கு கற்ப்பித்த ஆசிரியர்கள் சிலர் பாபாவின் பக்தர்களாக இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் பாபாவின் அருமை பெருமைகள் அற்புதங்கள் என்று பல கதைகள் எமக்கும் சொல்வார்கள். அவற்றை எல்லாம் நம்பி நானும் அவரை கடவுளின் அவதாரமாகவே நம்பியிருந்தேன் என்பதை விட நம்பவைக்கப்பட்டேன் என்று சொல்வதே சரியானது.  அநேகரின் நிலைமையும் இவ்வாறுதான் ( நம்ப வைக்கப்பட்டார்கள்)  என் வீட்டு சாமி அறையையும்  சாய்பாபா அலங்கரித்தார். ஏன்  என் பாக்கற்றில் இருக்கும் பர்சிலும் சாய் பாபா குடிகொண்டிருந்தார். பள்ளி பருவத்திலே புத்தக பூச்சிகளாகவே அதிக தருணங்கள் இருந்ததால பாபாவுடைய   நியாய தன்மைகளை பற்றி சிந்திக்க தோன்றவில்லை. ஆனால் வெளி உலகுக்கு வந்த போது தான் அவ்வப்போது அறியும் செய்திகளால் எனக்குள்ளும் சில சந்தேகம் வந்தது.

1. கருணாநிதி சச்சின் டென்டுல்லகர் போன்ற முக்கிய தலைகள் புட்பபதிக்கு சென்றால் சென்ற அடுத்த நிமிடமே பாபாவை அருகில் சென்று சந்தித்து போஸ் கொடுக்க முடிகிறது. ஆனால் கடைக்கோடி பக்தன் சென்றால் பல நாட்கள் காத்திருக்க வேண்டும், ஏன் அவரின் தரிசனம் கிடைக்காமலே திரும்பியவர்களும் உள்ளார்கள்.  இது என்ன நியாயம். ஆக கடவுளை சந்திக்க பணபலமும் அதிகார பலமும் செல்வாக்கு செலுத்துகிறது என்று கொள்ளலாமா?

2 . இவர் வீபூதி கொடுக்கும் போது பார்த்தீர்கள் என்றால், அனைவருக்கும் கொடுப்பதில்லை. சூழ்ந்திருக்கும் கூட்டத்திலே சில பேரை மட்டுமே தேர்ந்தெடுத்து கொடுப்பார். "அதிஷ்டலாப  சீட்டு போல". இது என்ன நியாயம்? இங்கே வீபூதி கிடைக்காதவனது மனநிலை எவ்வாறு இருக்கும்.  "நான் எதோ குற்றம் செய்துவிட்டேன். அது தான் என்னை சாமி கண்டு கொள்வதில்லை" என்று தினமும் அவன் மனசாட்சி அவனை குழப்பாதா. (அப்புறம் தான் தெரிஞ்சுது சாமி எதற்கு விபூதியை சிக்கனமா கொடுக்கிறார் என்று)

3. அதோடு இவர் வீபூதி குங்குமம் லிங்கம் ஆகியவற்றை மட்டும் தான கொடுப்பார்.  இதை விட மனிதனுக்கு முக்கியமான தேவைகள் இல்லையா? ஏன் மும்பையிலே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் முன் தன் சக்தியால் அதை  தடுத்து நிறுத்த  முடியவில்லை?   இயற்க்கை அழிவுகளை தவிர்க்க முடியாது தான் ஆனால் அது பற்றி  முற்கூட்டிய எச்சரிக்கை விடலாமே சுவாமியார்!  இலங்கையில்  நடந்த யுத்தத்தை கூட தடுத்து நிறுத்த முடியவில்லை, ஏன் இலங்கையிலே இவருக்கு  பக்தர்கள் இல்லையா? ஈழத்திலே நான் கண்ட வரை பாபாவுக்கு அதிகளவான பக்தர்கள் உள்ளார்கள். பாபாவை பார்ப்பதற்கென்றே இந்தியாவுக்கு படை எடுத்தவர்களையும்  கண்டுள்ளேன்.



சரி இவையெல்லாம் கால நியதி என்றால் மனித ரூபத்திலே கடவுள் எதற்கு? வீபூதி  கொடுப்பதற்கும் லிங்கம் எடுப்பதற்குமா?

சிலர் சொல்கிறார்கள், அவர் சாமியார் என்பதற்கு மேலாக மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளாராம். ஆனால் இது எனக்கு நியாயமான கருத்தாக தெரியவில்லை. உதவிகள் முறையான வழிகளில் செய்தாரா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் அதன் "மூலம்"!  தன் வீட்டு சொத்திலா செய்தார். அப்பாவி மக்களை ஆன்மீக வாதி என்ற போர்வைலே ஏமாற்றி அவர்களிடம் இருந்து பெற்ற பணத்திலே அரசியல்வாதிகளை சரிப்படுத்தி  சிறு பகுதியை மக்களுக்காக செலவழித்தார்.  இவர் கடவுளாக இருந்தால்.... தான் எப்போது இறப்பேன் என்று அறிந்திருப்பார். அவ்வாறு அறிந்து  அதற்க்கு முன்னரே தன்னிடம் உள்ள சொத்துக்களை மக்களுக்காக வழங்கியிருக்க வேண்டாமா?  இப்பொழுது பாருங்கள் இவர் பேரிலே தெக்கு நிற்கும் கோடிகணக்கான சொத்துக்காக வெட்டுக்குத்து, கொலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை!

பாபா சொல்லிருக்கார், நான்  மீண்டும் அவதரிப்பேன், அவதரித்து  36 வயசு வரை இந்த பூமியிலே வாழ்வேன் என்று! இது உண்மையா? ஆமாம், இது உண்மை தான்........... காவி உடுத்தவனை கடவுளாக பார்க்கும் மக்கள் உள்ளவரை யுகங்கள் தோறும் பாபாக்கள் அவதரிப்பார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை!



தனக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் பாபாவும்  விஞ்ஞானத்தை தானே  நாடினார். இதன் மூலம் மெய்ஞ்ஞானத்தை  விட  விஞ்ஞானம்  தான் உயர்ந்தது என்று "கடவுள் பாபா" நிரூபித்துவிட்டதாக கூட வாதிடலாம்.  இந்த உலகிலே பிறந்த உயிரினங்கள் யாவும் ஒரு நாள் இறக்க தான் செய்யும்.  விஞ்ஞானத்தாலே  இறப்பை தள்ளிப்போடலாமே ஒழிய  ஒரு போதும் தவிர்க்க முடியாது. 

மீண்டும் சொல்கிறேன் மனிதன் கடவுளாக முடியாது. கடவுளும் மனித ரூபத்தில் வந்து நான் தான் அவதார புருஷன் என்று தன்னை விளம்பரப்படுத்த மாட்டார். அவ்வாறு வந்து எவனாவது சொன்னால் அவனை பிடித்து பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே தான் அனுமதிக்க வேண்டும். நான் பாபாவின் இறப்பை நினைத்து சந்தோஷபடவில்லை. அப்படி சந்தோஷ படுவதற்கும் ஏதுமில்லை. பாபாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

மானே நிற்ப்பாய்.

நம் தொன்மைகளை அறிந்துகொள்ளும் போது ஏற்ப்படும் பிரமிப்பும் ஆச்சரியங்களும்  இன்னும் இன்னும் அவை தொடர்பான தேடல்களை அதிகரிப்பதாகவே இருக்கும். 



 அதாவது என்ன சொல்ல வர்றேன் என்றால், ஈழத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஊர்களுக்கும் அவ் ஊர்களுக்கு  பெயர் வருவதற்க்கான  காரணமும்  இருக்கும். ஈழத்துக்கு மட்டும் அல்ல அனைத்து நாடு, நகரம், இடங்களுக்கும்  இது பொருந்தும். தேடிப்பார்த்தால் காரணப்பெயர் புரியும், சில புதிராக இருக்கும். சரி விடயத்துக்கு வருவோம்.

ஈழத்திலும் இப்படி தான், சில ஊர்களுக்கு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காரணங்களை சொல்வார்கள். அநேகமானவை பழங்கால வரலாறுகளுடனோ இல்லை புராணங்களுடனோ   தொடர்புடையதாக இருக்கும்.  சில காரணப்பெயர்கள் சுவாரசியமானதாக, அவ் ஊர்களின் தொன்மையை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் சில வேடிக்கையாகவும் இருக்கும்.  உதாரணமாக நான் வாழும் வலிகாமம் பிரதேசத்திலே உள்ள சில கிராமங்களுக்கு சோழர் காலத்துடன் இணைத்து காரணப்பெயர்கள் உண்டு.



அந்த வகையில் தான் யாழ்ப்பாணத்திலே உள்ள ஒரு அழகிய இடம்  மானிப்பாய். தற்சமயம் கிராமம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இந்த ஊருக்கு மானிப்பாய் என்று பெயர்  வருவதற்கான காரணத்தை அறிந்த போது   உண்மையாகவே வேடிக்கையாக இருந்தது. அதாவது இதை இராமாயணத்துடன் தொடர்புபடுத்தியுள்ளார்கள்.


சீதையை கவர்ந்து செல்வதற்காக இராவணன் தன் மாமனான மாரீசனை மான் வடிவில் இராமன் இருக்கும் வனப்பகுதி நோக்கி செல்ல வைக்கிறான். அவனும் மான் உருவில் அவ்விடம் செல்லவே அந்த  மானை பிடித்து தருமாறு இராமனிடம் வேண்டுகிறாள் சீதை.  மனைவியின் ஆசையை நிறைவேற்ற மானை துரத்திக்கொண்டு செல்கிறான் ராமன்.  ஒரு கட்டத்தில் மானின் ஏமாற்று போக்கால் களைப்படைந்த இராமன் மானை நோக்கி "மானே நிற்பாய்" என்று சத்தமிடுகிறான். அவ்வளவு தான் இராமன் மானை நோக்கி "மானே நிற்பாய்" என்று சொன்ன இடமே பிற்காலத்தில் "மானிப்பாய்" என்று மருவியதாக சொல்லுகிறார்கள்.


மறுபுறம்   நீண்ட நேரமாகியும் வராத ராமனை தேடி இலக்குவணன்  செல்ல அந்நேரம் பார்த்து இராவணன் தன் நோக்கத்தை நிறைவேற்ற சீதையை கவர்ந்து செல்கிறான். அதன் பின்னர் ராமனும் இலக்குவணனும் சீதையை தேடி காடுகள் எல்லாம் அலைகிறார்கள். அதே சமயம் இராவணன் தான் சிவனிடம் பெற்ற வரம் மூலம் பாரிய பூகம்பத்தை வரவைத்து  ராமன் இருந்த பகுதிக்கும் தனது ஆட்சிக்குரிய பகுதிக்குமிடையே பிளவை ஏற்ப்படுத்துகிறான்.  அதுவே பிற்காலத்தில் பாக்கு நீரினை என்று பெயர் பெற்றதாம்.  அதன்பின்னரான  கதை தான் எல்லோரும் அறிந்ததே. இதே போல தான் அருகிலுள்ள மூளாய் என்ற பிரதேசத்துக்கும் இராமாயணத்துடன் தொடர்புடைய கதை சொல்லுவார்கள்.

நெருப்பில்லாமல் புகை வராதே! ஆனால்  இவற்றை முழுமையாக நம்புவதற்கு இடமில்லை.  காரணம் இராமாயணம் என்ற புராணம்  நடந்ததற்கான சில பல ஆதாரங்களை சுட்டி காட்டினாலும் இனமும் அவை நிரூபிக்கப்படவில்லை. அத்தோடு இலங்கை இந்தியா என்பது இற்றைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்தே இருந்ததாகவும்  (குமரிக்கண்டம்) பின்னர் ஏற்ப்பட்ட பாரிய கடற்கோளாள்களால்  பிரிந்ததாகவும் ஆராச்சியாளர்கள் கூறுவதை மறுப்பதற்கில்லை. அதோடு  இற்றைக்கு  17 ௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்ப்பட்ட கடல் நீர் மட்ட உயர்வால் ஏற்ப்பட்ட பிரிவே பாக்கு நீரினை என்று இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள், அங்கே காணப்படும் மணல் திட்டிகளை ஆதாரமாக சுட்டிகாட்டுகிறார்கள்.

பல ஆயிரம்  (9000 ? ) ஆண்டுகளுக்கு முன்னர்  ஏற்ப்பட்ட கடற்கோள்களால்  கடல் உள்வாங்கியவையே  துவாரகை, பூம்புகார், மாமல்லபுரம் போன்ற தமிழரின் தொன்மை வாய்ந்த நிலங்கள்  என்று ஆராச்சியாளர்கள் ஆதார பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். ஆனால் இன்னமும் இவை தொடர்பான ஆராய்ச்சிகளோ ஆய்வுகளோ தொடங்கப்படவில்லை.  இவை தொடங்கினால் பல கேள்விகளுக்கு,குழப்பங்களுக்கு  விடை கிடைக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளது.  பல ஆராச்சியாளர்கள் ஆர்வமாக இருந்தும் பெரும் பிரச்சனையாக இருப்பது மில்லியன் கணக்கில் செலவாகும் நிதி.  தன் பின்னால் ( பெயரின் பின்னால் அல்ல ஹிஹிஹி ) பெருமளவு நிதியை கொண்டுள்ள நம் "தமிழின தலைவர்" இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டார்  என்றால் தமிழரின் தொன்மை மட்டுமல்லாது  இவர் பெயரும் வரலாற்றிலே நிலைத்துநிற்கும்.

கற்பனையில் ஒரு காதல்!



ஒரே தெரு என்பதால்
அவ்வப்போது சந்திக்கும் எம் விழிகள்..,
பதிலுக்கு புன்னகைத்து செல்வாள்..
கால மாற்றத்தில்
இது காதலானது என்னுள்!

தினமும்
அவள் பாதம் சுமந்து
தாங்கி நிற்கும் தெருவை
விழிகளாலே உள்வாங்கியிருப்பேன்..

சில சமயங்களில்
அவளின் எதேச்சையாக
என் மீதான பார்வை
எனக்குள் ஏற்படும் மாற்றங்கள்
சொல்லி அடங்கா..

என் டயரி பக்கங்கள்
அவள் பெயராலும்,
நினைவுகளிலும்
கனவுகளிலும்
அவளுடன் நான் வாழும்
வாழ்க்கையாலும்
நிரம்பி கிடந்தது...

காத்திருந்து காலங்கள் கடக்க,
சில சமயங்களில்
கதைக்க முயன்று
தோற்றுப்போனேன் அவளிடம் !
நேர் விழியாக காணும் போதே
நான் பேச்சிழந்துவிடுகிறேன்..

தைரியம் இல்லாதவனாக
செல்பேசி  எண்ணை
கொடுத்து, அவளின்
சொல்லாத காதலுக்காய்
செல்போனை பாத்திருக்க..

திடீரென ஒலித்த அழைப்பு மணியில்
"ஹலோ" என்ற  மறுமுனையில்
அவள் காந்தர்வ குரல்..,
சிறிது நேரம் என்னையே மறந்த நான் ..
"உங்களை நான் சந்திக்க வேண்டும்
நாளை!".., என்றவள்  சொல்லி முடிக்க
விழிப்புக்கு வந்தவனாக...

அந்தரத்தில்  பறப்பதை
அன்று தான் முதல் முறை உணர்ந்தேன்..

அன்றைய நாள் இரவில்
என் விழிகள்
இமை மூட முன்னரே
அடுத்த நாள்
அதிகாலையும் விடிந்தது..

அவளுக்காய்..
இருமணி நேரம் முன்..,
காதல் கைகூட போகிறதே என்ற
எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக
சொன்ன இடத்தில் சென்று
தவமிருக்க
அவள் வருகிறாள்
தன் காதலனுடன்..!

நம்பாதேங்க இவங்கள நம்பாதேங்க...








யார் இவங்க ..!

நாம தலையில தூக்கி வச்சு,கட்டவுட்டு வச்சு , பாலாபிசேகம், தேனாபிசேகம் கற்பூர அபிசேகம் செய்கிற இந்த நடிகர்கள் தமது நிஜ வாழ்க்கையில,இந்த சமூகத்தில்  என்னென்ன தில்லுமுல்லு எல்லாம் செய்திருக்கிறார்கள்? இவர்களுடைய சினிமாநடிப்பு என்ற மாயையில் இருந்து சமூகத்தில் எவ்வாறு வேறுபடுகிறார்கள். இதோ ஒரு சிலர்


இவரு  தண்ணி பிரச்சனையில் தான் பிறந்த மாநிலகாரங்களை "உதைக்கவேணும்" எண்டு  பேசியவரு, பின்னர் தன் படங்களுக்கு தன் மாநிலக்காரன் ஆப்பு அடிப்பான் என்று தெரிஞ்சதும்  கேட்டாரு பாருங்க வாய் கூசாமல் மன்னிப்பு இவரு அல்லவா  தலைவரு!   (இதற்கு முதல்   mgr  காலத்தில எதோ ஒரு பிரச்னையால இவர mgr ஆக்கள் கடத்திபோய் பின்னிபிடல் எடுத்ததாக ஒரு தகவல்  சரி அதெல்லாம் நமக்கெதுக்கு... )
சமீபத்தில மும்பாய் சென்று தமிழனை ஓட ஓட விரட்டிய "இந்து மதவாதி" ஒருவரை  சந்தித்து "இவர் என் கடவுள் போல" என்று வாய் கூசாமல் சொன்னாரு. எதுக்கு சொன்னாரு?  இனி மாராட்டியத்திலும் இவரு படம் கிங் .(எல்லாம் பிளான் பண்ணி தானே செய்கிறாங்க)
தன் மகள் கல்யாணத்துக்கு ரசிகர்களுக்கு ஒரு அழைப்பிதழ்  கூட கொடுக்காதவரு காரணம்  சென்னையில வாகனநெரிசலு, கூட்டம்  அதிகம் எண்டு சப்பு கட்டு கட்டியவரு,   அப்பிடின்னா பத்தடிக்கும் மேலாக கட்டவுட்டு வச்சு ஏறி நிண்டு பாலபிசேகம் செய்யும் போதும்,  படம் ரிலீசான நேரம்  தியேட்டர் அண்டிய பிரதேசங்களிலும் கூட  தான் வாகன நெரிசலு, கூட்ட நெரிசலு எல்லாமே அப்பொழுது இப்படி ஒரு அறிக்கை விட வேண்டியது தானே! ரசிகனின் டிக்கெட் பணமும் ,கட்டவுட்டு பாலபிசேகமும் வேணும் ஆனா ரசிகன் வேணாம்!
வாலியின் பாராட்டு விழாவுக்கு சென்ற இவர பேச அழைச்ச போது அந்த பெரிய கூட்டத்துக்கு முன்னாடி இந்த பெரிய மனுஷன்  சொன்னாரு பாருங்க     " வாலி என்ர மகள் கல்யாணத்துக்கு வரல்ல அதால நானும் இங்கே வரக்கூடாது எண்டு தான் இருந்தன் ஆனா என்னை கமல்  தான் கட்டாயபடுத்தி  கூட்டிக்கிட்டு வந்தாரு" எண்டு. சின்னப்புள்ள தனமா இல்லை. இத்தனைக்கும் இவற்ற மகளின்ர கல்யாணம் நடந்த நாள் வாலியின் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள். இதை வாலியே மேடையில சொன்ன போது  இந்த  ஜாம்பவானின்  எப்பிடி கூனி குறுகியிருப்பாறு. இப்படி இடம் பொருள் ஏவல் அறிந்து கதைக்க தெரியாத இவரு.............! இதோ இவரு ரசிகன் ஒருவனது கடிதம் பாருங்க 


 
இவரு படங்களில  வசனம் பேசினாலே புரியாது இதில இவற்ற மனிசிமாரு எண்ணிக்கை யாருக்கு தெரியப்போது? இதுக்கும் ஒரு அருமையான விளக்கம் கொடுத்தாரு,  " நான் நடிக்கிற படத்தை மட்டும் பாருங்க எதுக்கு என்ர பெட்ரூம எட்டி பாக்கிறிங்க" எண்டு. அதெப்படியுங்க  ரசிகன் எண்டால் நடிகனை பின்பற்ற தானே பார்ப்பான். அதுக்காகவாவது தன் தனிப்பட்ட வாழ்க்கையில ஒழுங்கா  இருக்க வேண்டாம்?  அப்படியெண்டால்  "அட முட்டாள் பயலுகளே எதுக்கடா என்னை பின்பற்றுகிறீக, எதுக்கடா எனக்கு ரசிக மன்றம் வைக்கிறீங்க" எண்டு இவருக்கு பின்னால திரியும் அந்த கூட்டத்தை பாத்து கேட்க வேண்டியது தானே? (அப்புறம் பொழைப்பு போடுமே).



 
இவரு பெரிய காதல் மன்னன், இவரு காதலிச்சு ஏமாற்றிய பொண்ணுங்க எண்ணிக்கை யாருக்காவது தெரிஞ்சா லிஸ்ட் கொடுத்து உதவுங்கப்பா! அப்புறம்  சிட்.... எண்ட  படம் முடிஞ்ச பிறகு அதன் நாயகி யோடு  கசமுசா எண்டு  அரசல் புரசலாக கதை. இந்த சம்பவம் நடந்த போது இவருக்கு கல்யாணம் வேறு  ஆகிட்டுது. இப்ப கொஞ்சம் அடங்கி இருக்கிறாரு.
இவரு மனசில இருக்கிறத அப்பிடியே கொட்டுகிறேன் என்டு அப்பப்ப உளறி வச்சு வம்பில மாட்டிப்பாரு. சமீபத்தில ஒரு விழாவில நடிகர்களை மிரட்டி வரவைக்கினம் எண்டு பேசி "இனத்தலைவருக்கிட்ட" மாட்டிக்கிட்டாரு. "இனத்தலைவர" எதிர்த்து பொழைப்பு நடத்த முடியுமா? அப்புறம் "இனத்தலைவர"  சந்திச்சு என்ன செய்து  சமாதானப்படுத்தினாரு எண்டு எல்லாம் என்னிட்ட கேக்கப்படாது.  
மக்கள் பிரச்சனையை அரசியல் தலைவர்கள் தான் பாத்துக்கணும் அதுக்கு நடிகனை எல்லாம் அழைக்கப்படாது எண்டு சொல்லி மக்கள் மீது தான் கொண்ட "காதலை" வெளிப்படுத்தினாரு. இவற்ற படங்கள வெற்றிபெற வச்சு இவருக்கு சோறு போடுறது அந்த மக்கள் தான், ஆனா அந்த மக்களுக்கு எண்டு ஒரு பிரச்சனை வந்தா அதுக்கு முன் நிண்டு போராட மாட்டாராம் .  "தல" வா மக்கள் நல்லா இருந்தா தான் உன் படமும் நல்லா ஓடும் எண்டது உனக்கு தெரியாம போச்சே.  (இவரு எல்லாம் ஒரு "தல"வரு )



இவரு எதோ ஒரு விளையாட்டு ரீமில கேப்டனா இருக்க வேண்டியவரு. முற்பிறப்பில செய்த பாவம் (படத்த பாக்கிறவன் )சினிமாவுக்கு வந்துட்டாரு.அறுபது அடி உயரத்தில இருந்து குதிச்சாலும் அட்டகாசமா எழும்பி ஓடுவாரு.கேட்டா தமிழன காப்பத்த  போய்க்கிட்டு  இருக்காராம்:-).  தமிழ் மக்களின் ஆபத்பாண்டவராக காட்டிப்பாரு (சினிமாவில மட்டும் தாங்க) அதவச்சே மக்களின்ர தலயில மிளகா அரச்சு  அரசியல்ல குதிச்சவரு. மாரி கால தவளையா அப்பப்ப அறிக்கை விடுவாரு. நடிக்கிற படத்தில எல்லாம் "நான் தமிலேண்டா"   எண்டு பீத்திக்கிறவரு  மக்களுக்கு ஏதாவது பிரச்சனை எண்டா   குப்புற படுத்து கூட்டணி பற்றி சிந்திச்சுக்கிட்டு இருப்பாரு.   





ஒரு பிரபல்யம் வாய் திறந்து ஏதாவது சொன்னாலே கண் காது மூக்கு எல்லாம் வச்சு கட்டிடும் சுத்தி நிக்கிற கூட்டம்  என்றத நன்றாய் புரிஞ்சுக்கிட்டாரோ தெரியல, ஆரம்பத்தில் இருந்தே அறிக்கை விடுவது  குறைவு . இருந்தாலும் தான் அரசியலுக்கு போகிறேன் எண்டு அப்பப்ப மக்களை பயமுறுத்துகிறார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள் ஆனால் இந்தாள் விடயத்தில இது தலை கீழாய் நடக்குது. தானுண்டு தன் சினிமா உண்டு என்று இருந்தவரை அரசியலுக்கு இழுத்து வந்து விட்டாரு இவர் அப்பா. சமீபத்தில மீனவர்களுக்கு ஆதரவா ஒரு கூட்டத்தில பேசிய போது " மீனவர் மீது தாக்குதல் தொடர்ந்தால் இலங்கை என்ற ஒரு நாடு உலக வரை படத்தில இருந்து காணாமல் போய் விடும்" என்று வீர பேச்சு பேசி, போதாததுக்கு நான் அடிச்ச தாங்க மாட்ட நாலு நாலு தூங்க மாட்ட" என்று வேற பாடி இருக்காரு. இந்த ஒரு நடவடிக்கையே தெரியுது  இவருக்கு இன்னமும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்று. இப்படி பட்டவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் நிலை தான் என்ன?

ஏனோ தெரியல்ல இப்ப எல்லாம் அரசியல்ல வீராப்பு பேசுறவங்கள மக்கள் காமெடியன்களாய் பாக்கிற நிலை வந்திடிச்சு உதாரணமா டி ராஜேந்திரன், வைக்கோ, என்று பட்டியல் நீளுது.

                                                             he is real  hero

ஒரு சிலரை தவிர மற்ற  எல்லாம் "நடிகர்கள்" (வாழ்க்கையிலும்) மட்டும் தான். ஆனா இந்த ரசிகன் எண்டு சொல்லி அவன் பின்னால சுத்துறவன் தான் இன்னமும் இந்த சுயநல கூட்டத்தை  புரிஞ்சுக்க மாட்டேங்கிறான். பைத்தியமா அலையிறான். உலகில் எங்கும் நடக்காத கொடுமையாக தான் விரும்பும் நடிகனின் கட்டவுட்டை  கண்டவுடன் கையெடுத்து கும்புகிறான். பாலாபிசேகம் தேனாபிசேகம் எண்டதில இருந்து பியர் அபிசேகம் வரை செய்கிறார். 
யார் இந்த  சினிமாகாரன் இவன் பின்னால் சுத்துவதால் ஒருவனுக்கு என்ன லாபம். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் ( பணம்) இருக்கிறவன் பின்னால், அவனின்  நடிப்பு (சினிமா) என்ற மாயைக்கு மயங்கி அவன் பின்னால் பைத்தியமாக அலைகிறான். அந்த நடிகன் சினிமாவில் செய்வதை தானும் செய்ய  முனைகிறான்.

ஒரு சமூகத்தை நகர்த்திச்செல்ல வேண்டிய இளைஞர்களில் பெரும் பகுதி ரசிகர் மன்றம் என்ற பெயரில் நாசமாய் போகிறார்கள்.
சினிமா என்பது முன்னர் சிறந்த படைப்புக்களை வழங்கும் ஒரு துறையாக இருந்து  இன்று வியாபாரம் ஆகிவிட்டது. பார்கிறவன் உணர்ந்து திருந்தாதவரை இந்த பாடுகள் தொடரும்.

பத்தாவது உலகக்கிண்ணம் வென்றது இந்திய அணி.

கடந்த சில மாதங்களாக பெருத்த எதிர்பார்ப்புடனும் பல ஊகங்களுடனும் காத்திருந்த "2011 உலகக்கிண்ணம் யாருக்கு" என்ற கேள்விக்கு நேற்றைய தினம் விடை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் பத்தாவது உலகக்கிண்ணத்தை தோனி தலைமையிலான இந்திய அணி  தன்வசப்படுத்திக்கொண்டது.



நேற்றைய தினம் பெருத்த எதிர்பார்ப்புக்கள், பிரார்த்தனைகள் என்று அட்டகாசமாக  ஆரம்பமாகியது  கிண்ணத்துக்கான போட்டி. வான்கடே மைதானம் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கே சாதகமானது என்றும், இவ் ஆடுகளத்திலே 270 -300 வரையிலான   ஓட்டங்களை முதலில் துடுப்பெடுத்தாடும் அணி இலகுவாக குவித்துவிடும் என்றும், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது மின்னொளியில் இலக்கை துரத்துவது கடினம் என்றும் கள ஆய்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்த நிலையில் நாணய சுழற்ச்சியில் தோற்கிறார் தோனி.

இந்திய அணி சார்பாக நெக்ரா நீக்கப்பட்டு சிறீசாந்த் உள்வாங்கப்பட்டிருந்தார். மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானது என்று தெரிந்தும் விஷப்பரீட்சையாக நல்ல போர்மில் இல்லாத சிறீசாந்தை தோனி அணியில் இணைத்திருந்தால் அஸ்வினுக்கு வாய்ப்பு இல்லை. ஒரு வேளை இந்தியா தோற்றிருந்தால்  தோனிக்கு எதிராக முன்வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இது இருந்திருக்கும்.  இலங்கை அணியிலே ஐந்து பந்துவீச்சாளர்கள் களமிறங்கினார்கள்.



இம்முறையும் ஆரம்ப ஓவர்களை அபாரமாக வீசினார் சகீர் .அவர் வீசிய முதல் மூன்று ஓவர்களும் ஓட்டமற்ற ஓவர்கள். ஆனால் முதல் ஐந்து ஓவர்களிலே ஆறு ஓட்டங்களை விட்டு கொடுத்த சகீர், இறுதி ஐந்து ஓவர்களிலே 54 ஓட்டங்களை வாரி வழங்கினார். அதாவது, இறுதி ஓவர்களை இவர் வீசும் போது மீண்டும் ஒரு முறை  2003 உலகக் கிண்ண  இறுதி போட்டியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.

மகேலவுக்கு ஒரு சபாஸ். தனி ஒருவனாக நின்று, ஒரு பக்கத்தாலே விக்கெட்டுக்கள் சரிந்துகொண்டு இருந்தாலும் மறு பக்கத்திலே மிகவும் பொறுப்போடு நின்று ஆடி  274 ஓட்டங்களுக்கு அணியை நகர்த்தி வந்தார். குலசேகரா பெரேராவை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஆக கூடுதலாக 20 ஓட்டங்களை இலங்கை எடுக்க காரணமாகியது.  இலங்கை அணி இறுதி பவர் பிளே ஓவர்களில் எடுத்த ஓட்டம் 70 துக்கும் அதிகம்.



இலக்கு 275 ...., ஆடுகளம் வேறு இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதகமாக இருக்காது!  கடந்து முடிப்பார்களா இந்திய அணியினர்? அதற்கு ஏற்றா போல சேவாக்கும் வந்த வேகத்திலே திரும்பினார். சிறிய அதிரடியின் பின்  சச்சினும் அவசரமாக  பெவிலியன் திரும்பிட்டார். இனி என்ன இம்முறையும் இந்தியா கோட்டை விட்டுவிடும்  என்று தான் அநேக ரசிகர்களின் நினைப்பாக இருந்திருக்கும்.

இப்போட்டியிலே இந்திய அணியை பொறுத்தவரை மிகவும் பாராட்டுக்குரியவர்கள் காம்பீர் மற்றும் கோலி.  இவர்கள் போட்ட இணைப்பாட்டமே இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. பந்துகளை வீணடிக்காமல் ஒவ்வொரு, இரண்டு ஓட்டங்களாக தட்டி எடுத்தது  அபாரம். இதுவே இறுதி வரை அணி  நெருக்கடியை சந்திக்காமல் இருக்க ஏதுவாக அமைந்தது.



முதலில் துடுப்பெடுத்தாடி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட அதிக ஓட்டங்கள் எடுத்தும் பின்னர் இரண்டாவது இனிங்சிலே  விரைவாகவே சச்சின், சேவாக்கை களத்தை விட்டு வெளியேற்றியதும் இலங்கை அணியினரே நினைத்திருப்பார்கள் தமக்கு தான் வெற்றி என்று! சச்சினை வெளியேற்றியதுமே  அவர்கள் முகத்திலே வெற்றி களிப்பு துள்ளி குதித்தது )  ஏனெனில் முக்கியமான போட்டிகளிலே சச்சின் அடிச்சா தான் இந்தியா வெற்றி பெரும் என்ற நிலை இருந்தது உண்மை தானே! இலங்கையின் களத்தடுப்பு குறிப்பிடும் படியாக இருக்கவில்லை. காம்பீரின் ஒரு அருமையான ரன் அவுட் ஐ சங்கா கோட்டை விட்டார். அத்தோடு குலசேகரா பெரேரா இலங்கை அணியின் சிறீ சாந்கள்.....) நேற்றைய தினம் முரளியிடம் அதிகமே எதிர்பார்த்தேன். ஆனால் தனது இறுதி போட்டியிலே பெரிதாக முரளி சாதிக்கவில்லை. அத்தோடு ஆடுகளமும் துடுப்பாட்டத்துக்கு சாதகமா இருந்தது  துரதிஸ்ரம் .



கேப்டன் என்ற வகையில் நெருக்கடியான நிலையில் களமிறங்கி அணியை வெற்றி வரை அழைத்து சென்ற தோனிக்கு ஒரு சல்யூட். இறுதியில் ஒரு இமாலய சிக்ஸ்சருடன் தம் வெற்றியை உறுதி செய்தார். அத்தோடு ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார்.
இத்தொடரிலே சகல துறைகளிலும் கலக்கி நான்கு முறை ஆட்ட நாயகனாக தேர்வாகி ,ஒரு உலககிண்ண தொடரிலே அதிக தடவை ஆட்ட நாயகன் விருது பெற்ற அரவிந்தடி சில்வாவின் சாதனையை சமப்படுத்திய யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தெரிவானார். (15 விக்கெட், 362 ஓட்டம் )



இந்திய அணியை பொறுத்தவரை இது அவர்களின் கூட்டு முயற்சிக்கும் ஒற்றுமையான செயற்ப்பாட்டுக்கும் கிடைத்த வெற்றியே. ஆரம்பத்தில் இருந்தே பலம் வாய்ந்த அணிகளோடு மோதி முன்னேறி கிண்ணத்தை கைப்பற்றி உள்ளார்கள். இங்கே தனிப்பட்டவர்களின் பங்களிப்பை விட அணியின் ஒன்றுபட்ட பங்களிப்பே அதிகம்.

T20 உலகக்கிண்ணம், ஆசிய கிண்ணம் , இன்று உலகக்கிண்ணம் என தோனி  தன் தலைமையில் அனைத்தையும் சாதித்துவிட்டார்  மீதி இருப்பது ICC சம்பியன் கிண்ணம் தான்.
கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக செயற்பட்டு இறுதிவரை வந்த இலங்கை அணிக்கும் வாழ்த்துக்கள்.

தனிநபர் சாதனைகள்.
தொடரில் அதி கூடிய ஓட்டம்

1. திலகரட்ன டில்சான்  467 (8 Matches)
2. சச்சின்  டெண்டுல்கர்  464 (8 Matches)
3. ஜோனதன்  ற்றோத்ட்  422 (7 Matches)
4. குமார்  சங்கக்கார  417 (8 Matches)
5. உபுல்  தரங்க  393 (8 Matches)

கூடிய விக்கெட்

1. ஷஹிட்  அப்பிடி  21 (8 Matches)
2. சாகிர்  கான்  19 (8 Matches)
3. டிம்  சௌதி  18 (8 Matches)
4. ராபின்  பீட்டர்சன் 15 (7 Matches)
5. முரளிதரன்   15 (8 Matches)
6 . யுவராஜ்                   15  (8 Matches )


அதிக சிக்ஸ்சர்கள் அடித்த வீரர் ரோஸ் ரெயிலர் (14 )அதிக நான்கு ஓட்டங்கள் பெற்ற வீரர் டில்சான் (58) அதிக பிடிகள் எடுத்த வீரர் மகேல (8)  அத்தோடு இத்தொடரிலே இரண்டு கட்ரிக் சாதனைகளும் (ரோச், மலிங்க ) நிகழ்த்தப்பட்டது அறிந்ததே.