பதிவு முழுமை பெறாததால் தற்சமயம் நீக்கப்பட்டுள்ளது.

எனது விளக்கம் / பதில்கள்

நான் எழுதிய அந்த பதிவு இந்தளவுக்கு வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்க்கு காரணம் தவறான புரிதல்கள் தான். இல்லை???? என்ன நடக்காததையா நான் சொல்லிவிட்டேன்?  ஏன் நான் எழுதிய அனைத்தும் உண்மை என்றதுக்கு ஈழ பதிவர் ஒருவரே சாட்சி. சொல்லப்போனால் என்னை எழுத தூண்டியதும் அவர் தான்.

என் பதிவு தொடர்பாக நாற்று குழுமத்திலே மதுரன் கேள்வி எழுப்பியிருந்தார். அதுவும் அந்த பதிவு பப்பிளிஷ் செய்யப்பட்டு பத்து நாட்க்களின் பின்னர்...  இது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் தனது கருத்துக்களை,சந்தேகங்களை, விமர்சனங்களை என்பதிவில் பின்னூட்டத்தில் கேட்டிருந்தால் நான் நிச்சயமாக பதில் கொடுத்திருப்பேன். மாறாக நாற்று குழுமத்தில் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பியதன் காரணம் தான் புரியவில்லை.. அதனால் அந்த விவாதம் தேவையற்ற வாதங்களையும் விதண்டாவாதங்களையும் ஏற்ப்படுத்தியதுடன், அநாகரிகமான பின்னூட்டங்களும் ... இறுதியாக "நாற்று குழுமம் என் வீடு. என் வீட்டில் வந்து கதைத்தால் நான் அப்படி தான் கதைப்பேன்" என்பது போல  குழும ஓணரால் சொல்லுகிற அளவுக்கு சென்றுவிட்டது. அத்துடன் சிறிது நேரத்துக்கு பின் அந்த பின்னூட்டம் அழிக்கப்பட்டுவிட்டது..  நாற்று குழுமத்தில் பதிவு செய்யும் பதிவுகள், கமெண்ட்கள் அழிப்பதென்பது இது தான் முதன் முறையும் அல்ல. "மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று சொல்வார்களே" நானும் விலகிட்டேன்.. ஒரு வேளை மதுரன் தன் எதிர் கருத்துக்களை என் பதிவின் கீழே முன் வைத்திருந்தால் இந்த சங்கடங்கள் நிகழ்ந்திராமல் இருந்திருக்கலாம்.


சரி மதுரன் என் பதிவு சம்மந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
கந்தசாமி & துஷி

இன்று கந்தசாமியின் தமிழர்கள் ஏன் இப்படி என்ற பதிவை படித்தேன். அதில் ஒருசில விடயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் பலவற்றை நான் எதிர்க்கிறேன். கந்தசாமி அண்ணே! ஒரு வார்த்தை சொன்னீங்களே “ இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?” ஆமாம் கந்தசாமி அண்ணே குறைந்துவிடத்தான் போகிறது. இந்த சுயத்துக்காகத்தான் 30 வருடகால போராட்டமும் இலட்சக்கணக்கான உயிர்க்கொடைகளும்.

மது  இது உங்களது தவறான புரிதல்.  நான் சுயம் என்று சொன்னது 'என் பதிவில் குறிப்பிட்ட விடயங்களை மட்டும்' தான். அதாவது, நம்மவர்கள் தம் வாழ்நாள் பாதியை அடுத்தவனை பற்றி சிந்திப்பதிலே கழித்துவிடுவதை, எப்போ பார்த்தாலும் பழம் பெருமை, வீரம் பற்றி பேசுவதை, கலாசாரம் கலாசாரம் எண்டு ஒரு வட்டத்தை கீறி அதுக்குள்ளேயே வண்டி ஓட்டுவதை. கேவலம், இந்த சுயத்துக்காக தானா நீங்கள் சொல்லும் முப்பது வருட போராட்டம்?  முப்பது வருடமாக போராடியும் தீர்வு காணாமல் போனமைக்கு காரணம் என்ன? எம் ஒற்றுமை இன்மையும்,பிரிவினைகளும் தானே.  இப்படிப்பட்ட சுயம் தேவையா? ஏன், மூத்த குடிமக்கள் என்று பீத்திக்கிற நாமா இன்று .......பெய்ய கூட ஒரு துண்டு நிலம் இல்லாததுக்கு காரணம் இப்படிப்பட்ட எங்கள் சுயம் தானே. இந்த சுயத்திலே என்ன பெருமை வேண்டிக்கிடக்கு?


எது அண்ணே தனி மனித சுதந்திரம். அடுத்தவன் அடிபட்டு கிடப்பான். அதை பார்த்தும் பார்க்காம போறதா தனிமனித சுதந்திரம். 
அடுத்தவன் அடிப்பட்டு கிடக்கும் போது சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் பழக்கம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில்தான்.  மேற்கத்தேய நாடுகளில் இல்லை. குறித்த விபத்தை காணும் ஒருவன் ஒரு 'call' பண்ணினாலே போதும் அடுத்த சில நிமிடங்களில் அம்புலன்ஸ் வண்டி நிற்கும். வேடிக்கை பார்த்தல் என்ற பேச்சுக்கே  இடமில்லை.


அல்லது அடுத்தவன் கஸ்டப்படும்போது கண்டும் காணாம போறதா தனிமனித சுதந்திரம். சரி நீங்க சொல்வது போலவே இருந்தால் நாங்க என்ன தனிமனித சுதந்திரம் இல்லாமலா இருக்கிறம். நீங்க சொல்லுறமாதிரி அடுத்தவன் என்ன பாடுபட்டாலும் அதை கண்டுகொள்ளாம போறதுதான் தனிமனித சுதந்திரம் என்றா அந்த கன்றாவி எங்களுக்கு தேவையே இல்லை.
 
அங்கே ஒரு பகுதி மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில இருக்கும் போது, யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த மக்களில் எத்தனை சதவீதமான தமிழர்கள் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் மண்ணையும் வேடிக்கை பார்க்கும் நோக்கம் அற்று அபிவிருத்தி செய்யும் நோக்கோடு சென்று, அவர்களின் கஸ்ரங்களையும் துன்பங்களையும் பகிர்ந்திருப்பார்கள். ஒரு கிராமம் சேர்ந்து பத்து குடும்பங்களை தத்தெடுத்தாலே இன்று பாதி பிரச்சனை முடிந்திருக்குமே! ஐயோ ஆமிக்காரனுக்கு பயம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். இவ்வாறு பல சம்பவங்களை என்னால் கூற முடியம்.
கிழக்கிலும், அதன் பின்  வன்னியிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது,  ஏனைய பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களை பொறுத்தவை அவையெல்லாம் "ஒரு சம்பவம்". எத்தனை  பேர் செத்தார்கள் என்று கேட்டு உச்சு கொட்டிப்போட்டு தமது அடுத்த கருமத்துக்கு சென்றுவிடுவார்கள்.

ஊரில இருக்கிறவங்க எவ்வளவுதான் சண்டை பிடித்தாலும் யாருக்காவது ஏதாவது பிரச்சினை எண்டு வந்தால் எல்லோருமே ஒன்றுகூடி நிப்பம் பாருங்க. தாழ்த்தப்பட்ட சாதி என்று சமூகத்தால் தள்ளி வைக்கப்படுபவனுக்குமா? எவ்வளவுதான் சண்டைபிடித்தாலும் அந்த நேரத்தில மாமா, மச்சான் என்று அத்தனைபேருமே ஒண்டா நிப்பம் பாருங்க... அது தனிமனித சுதந்திரம் இல்லையெண்டா அந்த கன்றாவி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.
இப்படி ஒன்று கூடி, இருக்கிற பிரச்சனையையும் பெருப்பித்து, மாமனும் மச்சானும் அருவாள் தூக்கி வெட்டுப்பட, கடைசியில் அது குடும்பங்களுக்கிடயிலான சண்டையாக வந்து நிற்கும் சம்பவங்கள் தான் அதிகம்.

ஒரு குடும்பத்தில் பிரச்சினையெண்டா சனமெல்லாம் வேலிக்குள்ளால தலையகுடுத்து பார்த்துக்கொண்டு நிக்கும் எண்டு சொன்னிங்களே! உங்க மனட்சாட்சிய தொட்டு சொல்லுங்க நீங்க சொன்னது எந்தளவுக்கு உண்மை. 100 பேர் நின்று பார்த்தா அதில 60 பேர் அந்த பிரச்சினையை விலக்கு பிடிக்கத்தான் நிப்பாங்கள். அப்பிடி அடுத்தவனின் பிரச்சினையை தீர்த்துவைப்பது தனிமனித சுதந்திரம் இல்லையென்றால் எங்களுக்கு அது தேவையே இல்லை.

ஒரு குடும்பத்துக்குள் பிரச்சனை என்றால் அதில் வெளி ஆட்க்களுக்கு ,மூன்றாம் நபர்களுக்கு அந்த பிரச்சனையில் என்ன வேண்டி கிடக்கு? கணவனும் மனைவியும் சண்டை பிடித்தால் நாளை ஒற்றுமை ஆகிவிடுவார்கள். இதில் மூன்றாம் நபர்கள் சென்று  விலக்கு தீர்ப்பதை விட, அந்த குடும்பத்தினுள்ளே ஏற்ப்படும் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமை தான் முக்கியம்.  அது அவர்கள் தனிப்பட்ட விடயம்.   ஆனால் இந்த விலக்கு தீர்ப்பவர்கள் தான் நாளை ஊர் முழுவதும் கதையை கொண்டு சென்று, ஓட்டு மொத்தத்தில அந்த குடும்பத்தையே நாறடித்துவிடுபவர்கள்.


நாங்கள் அடுத்தவனை பார்த்து பொறாமைப்படிகிறோம்,. ஆனால் அதைவிட இருமடங்கு அக்கறை கொள்கிறோம். பக்கத்துவீட்டுக்காரன் கஸ்டப்படும்போது எட்டிப்பார்த்து ஏன் என்று கேட்காத ஒரு ஊர்க்காரனையாவது காட்டமுடியுமா? அடுத்தவன் கஸ்டத்துக்கு உதவ முடியாவிட்டாலும் அவனுக்கு ஆறுதலாக இருப்போம். அடுத்தவன் எப்படிப்போனால் என்ன என்று கண்டுகொள்ளாமல் போவதை விட அவன் துயரத்துக்கு ஆகக்குறைந்தது ஒரு ஆறுதலாகவாவது இருப்பது ஆயிரம் மடங்கு மேல்.
பக்கத்து வீட்டுக்காரனை எட்டி பார்க்கும் போது அவன் கஸ்ர பட்டால் உதவி செய்வது நல்ல விடயம் தான். ஆனால், பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்டன் டொயிலேட் கட்டினா கூட எட்டி பார்த்து "வடலிக்க குந்தினதுகளுக்கேல்லாம் வெஸ்டன் டொயிலேட் கேக்குதாம்" என்று புறம் கூறுவதிலும் பார்க்க, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இரு என்பதுக்கமைய மூடிக்கிட்டு இருக்கலாம் தானே.
எங்களை கடந்த காலத்தை மறக்கத்தெரியாத முட்டாள்கள் என்றீர்களே. உண்மைதான் நாங்கள் முட்டாள்கள்தான். செத்தவீட்டிற்கு முன்வீட்டில் கலியாணம் கொண்டாட தெரியாத நாங்களெல்லாம் முட்டாள்கள்தான். நாங்கள் கடந்த காலத்தை ஒருபோதும் மறந்துவிடப்போவதில்லை. கடந்தகாலங்கள்தான் எங்களை செப்பனிடுகிறது. அப்படி கடந்த காலத்தையும் மறந்துவிட்டு அடுத்தவன் பற்றி சிந்திக்காமல் எமக்காக மட்டுமே வாழ்வதுதான் நாகரிகம் என்றால் நாங்கள் நாகரிகமற்றவர்களாகவே வாழ்ந்துவிட்டுபோகிறோம்.
 
//பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே.  அதை விடுத்து  ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு  பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள்.// - இது தான் நான் முழுமையாக சொன்ன விடயம். 
கடந்தகாலத்தை படிப்பினையாக எடுத்துக்கொள்வது வேறு. கடந்த காலத்திலே தேங்கி நிற்ப்பதென்பது வேறு.
அதை விடுத்து முழுதாக புரிதல் இல்லாமல் குதர்க்கமாக பேசுவதற்கு நான் பொறுப்பல்லமது!
அங்கே ஒரு மிக பெரிய மனித பேரவலம் நடந்து கொண்டிருக்கும் போது கல்யாண வீடுகளும்,கோவில் திருவிழாக்களும்,வைபவங்களும்  கொண்டாடியவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்  நிச்சயமாக 'முட்டாள்களும்' இல்லை, அடுத்தவன் பற்றி 'நல்லவிதமாக' சிந்திப்பவர்களும் இல்லை. 



கந்தசாமி அண்ணே... எங்களுக்குள் இன்னமும் மனிதாபிமானம் செத்துப்போய்விடவில்லை. எங்கள் இதயங்களுக்குள் இன்னமும் ஈரம் கசிந்துகொண்டேதான் இருக்கிறது. வெள்ளைக்காரணைப்போல அடுத்தவனை கொத்துக்கொத்தாக கொன்று அவர்களின் ரத்தத்தில் பசியாறவில்லை. உங்கள் கண்களுக்கு அதுதான் நாகரிகமாக தெரிந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களுக்கு அந்த நாகரீகம் வேண்டவே வேண்டாம்.
மனிதாபிமானமா? ஈரம் கசியுதா? ஈழத்தில் உள்ள சாதி அமைப்பை,பிரிவினைகளை உண்டாக்கியது- தொடர்ந்து பேணி வருவது இதே ஈரமுள்ள இதயங்கள் தானே. பள்ளியில ஆசிரியர் சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி தருவார்; ஆனா தன்ர பிள்ளைய சாதி குறைஞ்ச இடத்தில கல்யாணம் செய்து கொடுக்கமாட்டார்.. இப்படியானவர்கள் இப்போ ஈழத்தில் இல்லையா? அதுமட்டும் இல்லை, வடக்கிலே அப்பொழுது சகோதர படுகொலைகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது - மாற்று இயக்கங்கள் தெரு தெருவாக தங்களுக்கிடையிலே கொல்படும் போது கொலையாளிகளுக்கு  தேநீர் ஊற்றி கொடுத்த மக்களும் இருக்கிறார்கள்.
 
இரண்டு இனம் இருந்தே ஒற்றுமையாக வாழ தெரியாதவர்கள் நாங்கள். ஆனால் ஒரு நகருக்குள் இருபது இனத்தவர்கள் அகதிகளாக வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நீங்கள் சொல்லும் வெள்ளையர்களிடம் உண்டு. அவர்கள் தம் எதிர்நாட்டிலே குண்டுகள் வீசினாலும் தம் நாட்டு குடிமக்களுக்கு பூரண உரிமை வழங்குகிறார்கள். அவர்கள் நாகரீகத்திலும் வளர்ச்சியிலும் பார்க்க நாம் அரை நூற்றாண்டு பின்தங்கி தான் இருக்கிறோம். அதற்க்கு காரணம் நீங்கள் சொன்ன "எப்பவுமே அடுத்தவனை பற்றி தான் சிந்திப்போம்"
திரும்பவும் சொல்கிறேன். நீங்கள் சொன்னவற்றில சில விசயங்கள் உண்மை. ஆனால் ஊரிலிருப்பவர்களை நீங்கள் வில்லன் கணக்கில் சித்தரித்துவிட்டீர்கள்
சில விசயங்கள் அல்ல. நான் சொன்னது முழுவதுமே உண்மை. ஏனெனில் நானும் அந்த சமூகத்தை சேர்ந்தவன் தான்.
துஷி & கந்தசாமி...
நிரூபனோ அல்லது வேறு யாராவதோ புலம்பெயர் தமிழரை பற்றி குறிப்பிட்டால் துரோகம், பிரிவினை, மண்ணாங்கட்டி, மயிர் என்று கூப்பாடுபோட்டுக்கொண்டு வரும் நீங்கள் ஊரிலிருப்பவர்களை பற்றி எந்த வகையில் தூற்றினீர்கள். நிரூபனாவது குறிப்பிட்ட ஒரு சிலர்தான் என்று பதிவில் குறிப்பிட்டுவிடுவார். ஹா ஹா நல்லா இருக்கய்யா உங்க நியாயம். 
இதே கேள்வியை தான் நானும் கேட்கிறேன். புலம்பெயர் தமிழர்களை தாக்கி ,நையாண்டி செய்து பதிவுகள் எழுதும் போது ஆமாம் சாமி போடுபவர்களுக்கு இப்போ மட்டும் எதுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வரணும் . ஏன் புலம்பெயர்ந்தவர்களும் தமிழர்கள் இல்லையா? அவர்கள் தாய்நாட்டு ஈழம் இல்லையா? ஆக உங்க மனதிலே பிரிவினைகளை வைத்துக்கொண்டு இவ்வாறு துள்ளுவது யாரை திருப்தி படுத்த?  சொல்லப்போனால் நான் எழுதிய பதிவுக்கான மூலம் நிருபனின் பதிவு தான். நான் சொன்ன தகவல்களுக்கான ஆதாரம் அங்கே உள்ளது. இல்லையெனில், நிரூபனை போல  "ஒரு சிலர்" என்று நான் குறிப்பிடாதது தான் உங்கள் கோபத்துக்கு காரணமா?
சமூக பிரச்சினைகளை எழுதத்தான் வேண்டும். அதற்காக ஒரேயடியாக ஒரு சமூகத்தையே வில்லன் கணக்காக சித்தரித்து அல்ல
சமூகத்தை வில்லனாக சித்தரிக்கவில்லை. எங்களுக்குள்ளும் அகற்றப்படவேண்டிய சாக்கடைகள் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது. அதை விடுத்து இன்னொரு சமூகத்தை குற்றம் சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளதை தவிருங்கள் என்று தான் சொல்ல வந்தேன்.


நண்பர்களே இப்பிடி எழுதிறதெண்டா நாங்களும் புலம்பெயர் மக்கள் பற்றி நிறைய எழுதலாம். ஆரம்பத்தில் சமூக பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த நான் பிறகு அதை விட்டுவிட்டேன். காரணம் எங்கள் குப்பைகளை நாங்களே கிளறினால் நல்லா இருக்காது என்று தான்.
புலம்பெயர் தமிழர்கள் பற்றி என்னத்தை உங்களால் எழுத முடியும். அதை தான் ஏற்கனவே ஒருவர் தன் தோளில் சுமக்கிறாரே. மிஞ்சி மிஞ்சி போனால் நாலு குள்ள நரிகள் செய்த நாசகார வேலையை புலம்பெயர் தமிழர்கள் செய்தார்கள் என்று எழுதுவீர்கள். அடைப்புக்குறிக்குள் "இது ஒருசிலரை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளது" என்பது வேறு.
 
கருணா குழு புலிகளுக்கு  செய்த துரோக வேலைகளுக்காக பொத்தம் பொதுவாக 'ஈழ தமிழர்கள் புலிகளுக்கு செய்த துரோகம் (கருணாவும் ஈழ தமிழன் தானே)' என்று எவனாச்சும் எழுதினால் ஏற்றுக்கொள்வீர்களா?

நீங்கள் புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லாது சம்மந்தப்பட்டவர்களை ஆதாரத்துடன் குறிப்பிட்டு எழுதினால் நானும் உங்கள் பக்கம் தான். அதை விடுத்து பொத்தம் பொதுவாக 'புலம்பெயர் தமிழர்கள் செய்தார்கள்' என்று பிரித்து சுட்டுவது தேவையற்ற பிரிவினைகளை தான் உண்டு பண்ணும்.
இது யாருடைய மனதையாவது பாதித்து இருந்தால் அதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. அந்தளவிற்கு கோபத்தில் இருக்கிறேன். நாளை ஒருவேளை கோபம் குறைந்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்.
வழிமொழிகிறேன்! இது தான் என்கருத்தும்.


இதற்க்கு  மேலேயும் நான் எழுதியது சரி தான் என்பதற்கு உங்களின் ஒரு பதிவே மிக சிறந்த ஆதாரம்.யாழ்ப்பாண மக்களின் பார்வையில் வன்னிமக்கள் ஒரு அனுதாபத்திற்கு உரியவர்களாகவும், தாழ்த்தப்பட்ட சமூகமாகவும் தான் நோக்கப்படுகிறார்கள். இதை படித்துவிட்டு பலர் வரலாம், யாழ்ப்பாணத்தவர் அப்படியல்ல என்று. ஆனால் யதார்த்தம் அதுதான். அவர்களின் முன்னேற்றம், அவர்களை ஒரு அனுதாபத்திற்குரியவர்களாக பார்க்கும் யாழ்ப்பாணத்தவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கே அவர்கள் தம்மை விட முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பீதியில், அம்மக்களிடத்தில் மனம் நோகும் வார்த்தைகளையும், பழையவற்றை ஞாபகப்படுத்தி அதன்மூலம் அவர்கள் மனங்களை நோகடித்து, விரக்தியில் ஆழ்த்தி தமது குரோதங்களை வெளிப்படுத்திவருகிறார்கள்.

http://www.sirakuhal.com/2011/07/blog-post.html

விடியலுக்காய் .........



முட்கள் படர்ந்த பயணம் 
கற்கள் விரித்த படுக்கை 
தூக்கம் துறந்த இரவுகள் 
பசி தின்ற பகல்கள் 
உறவைப்பிரிந்த கணங்கள்
உடல்கள் புதைந்த நிலங்கள்.

எத்தனை இழப்புக்கள்! 
எத்தனை இடர்கள்! 
எத்தனை வலிகள்! 

இத்தனைக்கு நடுவிலும் 
உறுதி கொண்ட கண்கள்.
தளர்ந்துவிடாத கணங்கள்.

விட்டில் பூச்சியாகவும் உமை 
சில வீணர்கள் நினைக்கக்கூடும்!  
அவர்கள் அறிவார்களா 
மரணத்தை அனைத்து 
நீங்கள் ஒளி தேடிச்சென்றது 
நாளைய "நம்" விடியலுக்கென்று?

தமிழர்கள் ஏன் இப்படி...?

'தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை  பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான்.

பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம்  கண்ட  குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம்.

முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள்  தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல  உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது.  அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும், இந்த குடும்ப பிரச்சனையில ஊரில இருக்கிற நாலு "பெரிய மனுசனுகள்" மூக்க நுழைக்கும் போது அது ஊர் பிரச்சனையாகும், கடைசில இந்த ஊர் பிரச்சனை பெருத்து பெருத்து   நாட்டில ஒரு முக்கிய பிரச்சனையாய் நாளைக்கு  வந்து நிக்கும்.. இது தேவையா?


அடுத்தவனை, அடுத்தவன்  வீட்டை எட்டி பார்ப்பது என்பது  நம்மவர்களின் அன்றாட கருமங்களில் ஒன்றுகிப் போனது  என்று சொன்னாலும் மிகை இல்லை.  நம்ம ஊர்களில பார்த்தோம் என்றால் இரண்டு வீடுகளுக்கு இடையிலான எல்லையை ஓலைகளால்(வேலி) அடைத்திருப்பார்கள்; இது கூட அவர்களுக்கு வசதியாகிப்போகும்!  ஒரு வீட்டில குடும்ப பிரச்சனை எண்டால், அருகில உள்ள வீதியால போற- வாற சனம் பாதி அந்த வேலிக்க தான் தலையைக்குடுத்துட்டு நிக்கும். 

அதுமட்டும் இல்ல. தன்ர  பக்கத்து வீட்டுகாரன்ர பிள்ளை வெளிநாட்டில இருந்து காசு அனுப்பி, அந்த பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா கூட 'வடலிக்க குந்தினதுகளுக்கெல்லாம் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கேக்குதாம்' எண்டு சொல்லி பொறாமைப்படுகுதுகளாம் நம்ம சனம்... என்ற உண்மையை  நம்ம பதிவர்கள் யாரோ எழுதியதாக நினைவு..! அடச்சே ...அவன் வெளிநாட்டில உழைச்சு வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா என்ன, வீட்டுக்க டொயிலேட் கட்டினா என்ன..! அத போய் எட்டிப்பாத்து ...............!!

இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில  ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான், இல்லை  பட்டிக்காட்டு தனமா ஒட்டி நிண்ணு கமெராவில போட்டோ எடுத்து நியூசில போட்டு, எதோ கலாசாரத்தை காப்பாற்றிவிட்டேனே எண்டு பீத்திக்கமாட்டான். ஆனா நம்ம ஆக்கள் இருக்கார்களே  வயசு போன பாட்டி ஸ்டைலா ட்ரெஸ் போட்டுக்கொண்டு றோட்டில நிண்டாலே போதும்; எதோ நமீதா கண்டது போல நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்ப்பார்கள் பாருங்கோ.. பாட்டி செருப்பு எடுத்து காட்டும் வரை இமையே மூட மாட்டார்கள். சில வேளை இடையில எவனாச்சும் வந்து "ஏண்டா! வயசுபோனதுகளை கூட நாட்டில நிம்மதியா உலாவ விடமாட்டிங்களா?" எண்டு கேட்டால் "அண்ணே வயசானதுகள் எல்லாம் இப்பிடி ட்ரெஸ் பண்ணினால் நம்ம கலாசாரம் என்ன ஆவது" எண்டு பிளேட்ட மாத்தி கலாசார காவலர்கள் ஆவார்களே; அங்கே  நிக்கிறார்கள் நம்மவர்கள்..

பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே.  அதை விடுத்து  ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு  பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள்.  ஆனால் நம்ம சனம் இருக்கே..எவனாச்சும் வெளிநாட்டால வந்து சொகுசாய் சுத்தி திரிஞ்சா பொறுக்காது.. செருப்பே இல்லாமல் திரிஞ்சதுகளுக்கு இப்ப பள்சர் கேக்குதாம் எண்டு புகைக்க தொடங்கிடுகிறார்களாம்.. 

இவ்வாறு தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும் வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.

என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில்  முன்னேறிவிடுவார்கள். 

இந்த சுயம் எண்டு சொன்னேனே... இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?

முடிஞ்சா சிரியுங்கோ..










தமிழேண்டா ..!

பொதுவாகவே மனிதர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை "எல்லாம்  இந்த ஒரு சான் வயிற்றுக்கு தானே..!" என்று ஒற்றை வரியில் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இந்த வரியை சரியாக, காலாகாலமாக கடைப்பிடித்து வருகிற பெருமை தமிழனுக்கு மட்டும் தான் உண்டு.  எப்பூடி ....

*உலகிலே ஒப்பீட்டளவில் தமது  அன்றாட உணவை தயார் செய்வதற்காக அதிகளவு நேரத்தை செலவழிப்பவர்கள் தமிழர்களாக தான் இருப்பார்கள். இந்த விஷயத்தில் யாராலும் தமிழர்களை அடிச்சுக்க முடியாது. தினமும் மூன்று நேரம் அவியல், பொரியல் ,வறுவல்..  இதனால் தானோ என்னமோ உலகிலே விருந்தோம்பல் என்றால்(அதுக்கு மட்டும் தான்) தமிழனுக்கு என்று  தனி இடம்  உண்டு.

*அதே போல, தனக்கு வாய்க்கு ருசியான உணவு வாழ் நாள் முழுவதும் வேண்டுமே... என்பதற்காய் ஒரு ஆண் தனக்கு பெண் தேடும் போது பெற்றோரிடம் சொல்லிக்கொள்வான் "நல்லா சமைக்கத் தெரிந்தவளாக பாருங்க" என்று. இவ்வாறு தனக்கு துணைவியாக வரப்போவளிடம் முதல் கண்டிஷனாக 'பெண் சமைக்க தெரிந்தவளாக இருக்க வேண்டும்' என்று கருதுபவனும் தமிழனாக தான் இருக்க வேண்டும்.

*உலகின் வளர்ச்சியடைந்த-அடைந்து வருகின்ற, குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க நாட்டவர்களின் சராசரி ஆயுட்கால எல்லை எம்மை விட அதிகம். தொண்ணூறு வயசென்றாலும் பொல்லு பிடிக்காமல் தெருக்களிலே நடந்து செல்வதை பார்க்க எமக்கே ஆச்சரியமாய் இருக்கும். இத்தனைக்கும் அவர்கள் எம்மை போலெல்லாம் வாய்க்கு ருசியாக அவிச்சு கொட்டுவதில்லை. அவர்களை பொருத்தவரை உடல் நலம் தான் முக்கியம். அதற்கேற்ற போலவே அவர்களின் உணவு பழக்கங்களும்..  ஆனால் நம்மாக்கள் இருக்கார்களே அறுபத்தி ஐந்து-எழுபதிலே கடைசி டிக்கட் வாங்கிற நிலைக்கு வந்திடுவார்கள்.  இல்லை மூன்றாம் கால் உதவி வேண்டி  கைத்தடி  பிடிக்க தொடங்கிடுவார்கள். எம்மை பொறுத்த வரை உடல் நலம் எல்லாம் இரண்டாம் பட்சம், வாய்க்கு ருசி தான் முதல்.

*தமிழர்கள் வசிக்கும் அநேகமான வீடுகளிலே அந்தந்த  வீட்டு பெண்கள் ஐந்து-ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். வேலைக்கு போகணும் என்று அல்ல.. சமைக்கணும்! இவ்வாறு வெளிவேலை வெட்டி இல்லாது, சமைக்கணுமே.... என்டதற்க்காய் அஞ்சு மணிக்கு அல்லார்ம் வச்சு எழுந்து அடுப்பு ஊதுறத்திலும் தமிழனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.

*நான் இப்போ இரண்டரை வருசமா பெற்றோரை பிரிந்து வேறு ஒரு நாட்டில இருக்கிறன். நாட்டில இருந்து கிழமேல மூணு தடவையாவது தொடர்பு கொள்வார்கள். அப்பிடி தொடர்பு கொண்டதும் "ஹலோ.. சுகமா இருக்கியா!" எண்ட வார்த்தைக்கு அடுத்ததாய் கேட்ப்பார்கள் " சாப்பிட்டியா..!" அதோட விட்டாலும் பறுவாயில்ல.. 'என்ன சாப்பாடு, என்ன கறி..' எரிச்சல் தான் வரும்.. அட, நம்ம வீட்டுக்காரர்  மட்டும் தானா இப்படி! என்று நினைச்சு என் நண்பர்களிடமும் கேட்டு பார்த்தன்.. அவர்களுக்கும் இதே நிலைமை தான்.

*சில அரசியல்வாதிகள் இருக்கார்கள். மேடையில ஏறியவுடன் நெஞ்சை நிமிர்த்தி, மீசைய முறுக்கிக்கொண்டே   "உலகின் மூத்த குடிமகன்டா தமிழேன்...!" என்பார்கள். அப்பப்ப இதை கேட்டப்புறம் நானும் ஜோசிச்சு பார்ப்பதுண்டு, உலகின் மூத்த குடிமகன் தமிழனின் சாதனைகள், கண்டுபிடிப்புக்கள்? ......... யார் சொன்னது தமிழன் எதுவுமே கண்டு பிடிக்கல எண்டு.. சமீபத்தில கூட இடியப்பம் பிழியிற மெசினை கண்டு பிடித்துள்ளானே! இதற்க்கு முன்னர்  மின்சாரத்தில இயங்கிற ஆட்டுக்கல்லை கண்டு பிடித்த பெருமையும் தமிழனது தான் என்று நினைக்கிறன். ஆக தமிழனின் கண்டு  பிடிப்பு கூட சாப்பாட்டை மையமா  வச்சு தான்.

*ஈழத்தை பொருத்தவரை அதன்  மூத்த குடிமக்கள் தமிழர்கள் தான். ஏன், மகாவம்சம் கூட போற போக்கில இந்த சந்தேகத்தை சில இடங்களில் கிளப்பி விடும். ஆனா இந்த மூத்த குடிகள் தமது  காலத்துக்கு முற்பட்ட- தமது காலத்துக்குரிய முக்கிய விடயங்களை ஆவணப்படுத்த வேண்டுமே; எம் சந்ததியூடு அவற்றை எடுத்து செல்ல வேண்டுமே என்ற சிந்தனைகள் ஏதும் அற்றே வாழ்ந்து முடித்தார்கள்.
ஏறத்தாழ கிபி பதினேழாம் நூற்றாண்டு வரை தின்றுவிட்டு படுப்பதையே தமது பிறப்பின் நோக்காக கொண்டு செயற்பட்டார்கள். (நிரூபன் அவர்கள் தனது தொடரிலே   குறிப்பிட்டிருப்பார்.)

*அன்று மட்டுமல்ல, இன்று கூட அதை தான் செய்கிறார்கள். அதாவது, எமக்கு பிற்பட்ட காலம், எமது சந்ததி என்று எது பற்றியும் யோசிப்பதில்லை. எமக்கு என்று ஒரு மிகப் பெரிய விடுதலை அமைப்பு இருந்த போது, அதற்கு  சகல விதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்து, நோக்கத்தை விரைவாக அடைந்து கொள்ள எத்தனிப்பதை விட தின்று படுப்பதே முக்கிய நோக்காக கொண்டிருந்தார்கள்(தோம்). ஆனால் சில வேளைகளில் அந்த விடுதலை அமைப்பின் போராளிகளுக்கு உணவு (மட்டும்) கொடுப்பதையே தமது வரலாற்று கடமையாக கொண்டிருந்தார்கள். அதை விட.....?
அது போல கொடிய யுத்தத்தால் ஒரு பகுதி மக்கள் ஒரு வேளை உணவின்றி உடல் சுருங்கி வாடிய போதும், அந்த மக்களுக்காக யுத்தத்தால் பாதிக்கப்படாத பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது ஒரு நேர உணவையே இழக்க தயாராக இருக்கவில்லை.


ஆக  எந்த விதத்தில பார்த்தாலும் பொதுவாகவே தமிழனின் சிந்தனை, செயல், நோக்கம் எல்லாமே சாப்பாடு என்ற ஒன்றை மட்டுமே மையமாக வைத்து சுத்தி வருகுது. ஆமாம்..  ஒரு சான் வயிற்றுக்கு தான் இந்த மனித பிறப்பு என்னும்  யதார்த்தத்திற்கு   அமைவாக வாழ்பவன் தமிழன் மட்டும் தான்..... என்பதை ஆணித்தரமாகவும், பெருமையாகவும் கூறிக்கொண்டு இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்..   தமிழேண்டா..!!