நண்பர்களுடன்....

புகைத்தல் உடம்புக்கும், உனக்கும் கெடுதலை தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று நான் என் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் என்னை படு கேவலாமாக ஒரு பார்வை பார்த்துட்டு சொல்லுவார்கள் "நீ பிறந்ததுக்கு இதுவரை என்னத்த அனுபவிச்சிருக்க" அதுக்கு மேலயும் நான் வாய் திறக்குறதில்ல.. ஏனெண்டால் 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடுதான்; ஆனால் அதையும் தாண்டி நல்ல விஷயங்களும் இருக்கு' எண்டு சொல்லி அந்த நல்ல விஷயங்களை பட்டியல்படுத்த தொடங்கிடுவார்கள்..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனக்கு பழக்கமான ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார்' தம்பி! இந்த சிகரெட் பழக்கத்தால எனக்கு மாசம் முன்னூறு யூரோக்கு கிட்ட வீணாய் போகுது; அதால இனி நான் சிகரெட் பழக்கத்தை விட்டுடலாம் எண்டு நேற்று தொடக்கம் முடிவெடுத்துட்டன்.. நேற்று ஃபுல்லா நான் சிகரெட் பிடிக்கவே இல்ல'... இப்பிடி பெருமையா பெருமூச்சோடு சொல்லி முடிக்க, நானும் பேசாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன்!

சில மணிநேரம் கழித்து இருவருமாக வெளியிலே புறப்பட்டோம்; போய் திரும்பிகிற போது ' தம்பி இதோகொஞ்சம் நில்லுங்க வருகிறன்' என்று சொல்லி அவசரமாக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைந்தவர், வரும் போது சில மணிநேரத்துக்கு முன்னர் பார்த்த 'அதே வாயில்-அதே சிகரெட்!!' இம்முறையும் நான் பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

இத்தனைக்கும் நான் அவரிடம் எந்த கேள்வியோ விளக்கமோ கேட்கல! ஏனெண்டால் விளக்கம்/பதில் எப்படி வரும் எண்டு எனக்கு நல்லாவே தெரியும்! இப்பிடி எத்தனை பேரோட பழகியிருப்பம்:)

முன்னரெல்லாம் சிகரெட் பெட்டியிலே 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு' என்று எழுதப்பட்டு தான் விற்பனைக்கு வரும்..ஆனா இந்த புகைப்பிரியர்களுக்கு அதை வாசிச்சு வாசிச்சே அது ஒரு புளித்துப்போன ஒரு வசனமாய் ஆகியிருக்கும் போல.... ஆனால் இப்பொழுது சிகெரட் பெட்டியிலே, புகைப்பவர்களது நலன் கருதி(!) புகைப்பதன் மூலம் உடலில் வரும் வியாதிகள் உடல் உறுப்புக்களை என்ன பாடு படுத்தும் என்பதை புகைப்பட வடிவிலும் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியும் புகை பிடிப்பதை அவர்களால் நிறுத்த முடியவில்லை என்றால், அவர்களின் புகைத்தல் அடிமைத்தனத்தை நினைத்து வருத்தம் கொள்வதா.. இல்லை, இந்த புகைப்படங்களை பார்த்தும் அவர்களின் 'எதையும் தாங்கும் நெஞ்சத்தை' பாராட்டுவதா............... முடியல!!!
------------------------------------------------------------------------------------------------


சே குவேரா பற்றி அறியாதவர்கள் மிக குறைவு என்றே சொல்லலாம். அதுவும் இந்த சமூக வலைத்தளங்களை பாவிப்பவர்கள் நிச்சயமாக எதோ ஒரு கட்டத்தில், எதோ ஒரு விதத்தில் சே குவேரா பற்றி அறிந்திருப்பார்கள். சொல்லப்போனால் சமூக தளங்களிலே சே குவேராவை தமது ரோல் மொடலாக(!) கொண்டவர்களை அங்காங்கே அதிகமாக காணலாம். சிலர் ஒரு பந்தாவுக்காக சே போன்ற புரட்சியாளர்களின் புகைப்படங்களோடும், வசனங்களோடும் இணையப்புரட்சியாளர்களாக சுற்றுவது வேறு கதை... அது தேவையில்லை! ஆக, மொத்தத்தில் சமூக தளங்களிலே சே குவேரா ரொம்ப பரீட்சயம்!

அப்படி இருக்க சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் ஒன்று என்னை மகா அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, சரியான கடுப்பையும் கிளப்பிவிட்டது.. ஆனாலும் இன்று வரை அந்த சம்பவத்தை நினைக்கும் போது என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தாமல் இருக்க முடியவில்லை..

அதாவது சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பன், அவனுக்கு ஒரு முப்பது வயசுக்கு மேல் வரும்; அவன் வழமை போலவே கம்பியூட்டரில் தனது முகநூல் கணக்கை பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்.. இருந்தவன், சற்று நேரத்தில என்னை கூப்பிட்டு ஒரு போட்டோவை காட்டி...

"இவர் தான் முன்னாள் புளெட் தலைவர், உனக்கு தெரியுமா?" என்று முகத்தை சீரியஸாக வைச்சுக்கொண்டு கேட்டான்.... யார்ரா எண்டு கிட்ட போய் பார்த்த எனக்கு அப்பிடியே ஷாக்..

"டேய் எதை வச்சுடா இவர புளெட் தலைவர் என்கிறா?"


"எனக்கு தெரியும்; முந்தி புளெட்காரங்கள் இப்படி தான்.. தாடியோடையும், தொப்பியோடையும் இருப்பினம்...."

-------------------------------------------------------------------------------------------------
இல்லை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை என்றாகிப்போன இணையம் என்னும் பெரும் கடலிலே, மீண்டும் ஒரு முயற்சியாக புரட்சி எவ்.எம் என்னும் இனைய வானொலி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்ப்பட்டுக்கொண்டு உள்ளது. நீங்களும் புரட்சி எப்.எம்'முடன் இணைந்திருக்க இங்கே சொடுக்கவும்.

3 comments:

  1. புகைப் பழக்கம் மட்டுமல்ல... எந்தக் கெட்ட பழக்கமும் நாம் விட்டாலும் அதை நம்மை விடாது....

    மனதில் அசாத்திய உறுதி வேண்டும்... இல்லை எனில்...
    ஆரம்பத்திலேயே கிள்ளி எரிய வேண்டும்....

    (த.ம. 3)

    ReplyDelete
  2. ரொம்பத் தான் நொந்துட்டீங்க போல...

    ReplyDelete
  3. சில இடங்களில் நாம் மௌனித்திருப்பதே நலம். ஏன்னா தப்பைச் சரியென்று சொல்வோரிடம் தப்பைத் திருத்த நினைத்து தர்ம அடி வாங்கி அனுபவம் அடியேனுக்கு உண்டு! ஹி..ஹி..

    ReplyDelete