ஜெயமோகனின் தேசப்பற்று! அவமானப்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்.

இவர்களுக்கு உண்மையாகவே வாசகர்களிடம் இருந்து கடிதம் வருகிறதா, இல்லை இவர்களே வாசகர் பெயர்களில் தமக்குத் தாமே கடிதம் எழுதுக் கொள்கிறார்களா தெரியவில்லை! காரணம் இந்த கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தற்புகழ்ச்சி ரொம்ப ஜாஸ்தி தான்!

வழமை போலவே, சில நாட்களுக்கு முன்னர் ஜெயமோகன் தனது பக்கத்திலே வாசகர் கடிதங்கள் சிலவற்றை பிரசுரித்து அதற்க்கு பதிலளித்திருந்தார். அதாவது, குறித்த வாசகர்கள் இலங்கைக்கு சென்ற இந்திய "அமைதிப்படையில்" பணியாற்றியவர்கள் என்றும், தாம் பணியாற்றிய காலத்தில் தம் சக வீரர்கள் மிக இதய சுத்தியுடன் நடந்து கொண்டதாகவும், ஈழத்திலே தமிழர் வாழ் பிரதேசங்களிலே பாலாறும் தேனாறும் ஓட பெரும் பிராயத்தனம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்க்கு மேலாக மனிதாபிமான நடவடிக்கை என்று வேறு அதை அவர்கள் விழித்திருந்தார்கள்!
மாறாக இந்திய அமைதிப்படை ஈழத்திலே கொலைகளும் கற்ப்பழிப்புக்களும் செய்ததாக கூறப்படுவது வெறும் அவதூறு, அது அரசியல் பிரச்சாரம் மட்டுமே என்று கூற, அதை ஆமோதிப்பது கணக்காய் ஜெயமோகன் அவர்களும் தனது கருத்துக்களை கூறி, தன் காது, கண், மூக்கு வழியாக வழியும் தேசப்பற்றை நிரூபிக்க முயன்றிருந்தார்.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னதாக நிகழ்ந்த அநியாயங்களை வெறும் அவதூறுகள் என கூறி நாலு பேர் நியாயப்படுத்த, அதற்க்கு தாளம் தப்பாமல் ஜெயமோகனும் பக்கவாத்தியம் வாசிக்கிறார்!

இந்திய அமைதிப்படையின் கொடூரமான அக்கிரமங்ககள் அரங்கேறிய மண்ணிலே, அந்த சம்பவங்களை அனுபவித்து வாழ்ந்த மக்கள் மத்தியிலே வாழ்ந்த எமக்கு இது எவ்வளவு பெரிய அராஜகமாக, இருட்டடிப்பான செயலாக தோன்றும்!

ஒட்டுமொத்த ஈழமுமே அனுபத்த வலிகளும், வேதனைகளும் ஜெயமோகனின் தேசப் பற்றை விட சிறிதாகிப் போகலாம்! அந்த சமகாலத்திலே (22/10/1987) இந்திய இராணுவம் யாழ் போதனா வைத்தியசாலையில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கசாப்பு கடைக்காக வைத்திருந்த ஆடுமாடுகளாக தெரிந்திருக்கலாம்! கொக்குவில் பிரம்படி என்னும் இடத்தில் டாங்கிகள் ஏற்றி உடல் நசுக்கி கொல்லப்பட்டவர்களும், கொக்குவில் இந்துக்கல்லூரி, வல்வை, வரணி, அளவெட்டி இந்து ஆச்சிரமம் போன்ற இடங்களில் கொத்துக்கொத்தாக "அமைதிப்படையால்" கொலைசெய்யப்பட்ட மனிதர்களை ஜெயமோகன் வெறும் பூச்சி புளுக்ககளாக உணர்ந்திருக்கலாம்! ஆனால் காலம் வரலாற்றை சரியாகவே பதிந்து செல்கிறது/செல்லும். மாறாக ஜெயமோகன் போன்ற தனி மனிதர்கள் தங்கள் பற்று, வெறுப்புக்கள் மூலம் அவற்றை திசை திருப்பிவிட முடியாது என்பதை ஜெயமோகனும் நன்றாகவே அறிந்தவர்..!

அத்துடன் இறுதியாக ஒன்று குறிப்பிட்டு இருந்தார் "இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்." இங்கே இந்தியா தலையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழ தமிழர்களிடம் இருந்தது; அது அரசியல் மட்டத்திலான அழுத்தங்களை கொடுத்து போரை நிறுத்தக்கூடிய எதிர்பார்ப்பே ஒழிய, இராணுவ ரீதியான தலையீடாக இருந்திருக்கவில்லை. அப்பிடி இருந்தால் அது தம் தலையில் தாமே கொள்ளிக்கட்டையை வைப்பதற்கு ஒப்பானது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு மறதி வியாதி பிடித்தவர்கள் ஈழ தமிழர்கள் இல்லை!

மாறாக இந்திய அரசு இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப எண்ணி(!) அதே ஜெயமோகன் சொல்லும் "வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்" தான் தடுத்தது என்பது "வரலாற்றின் கசப்பான அனுபவம்" ஆக இருக்கலாம்!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் சரி, அதற்க்கு முன்னைய தமிழர்கள் மீதான சிங்கள அரசின் வன்முறைகளின் போதும் சரி, ஏன், சமீபத்திய ஜெனீவா வாக்கெடுப்புவரை கூட வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் கருதி இலங்கை அரசை தம் தலையிலே தூக்கி வைத்திருந்து கொண்டாடிய இலங்கை வாழ் முஸ்லீம்கள், தம்புள்ளையில் தம் பள்ளிவாசலை அரச அங்கீகாரத்துடன் இடிக்க முனைந்தார்கள் என்பதற்காக அதே இலங்கை அரசின் மீது 'ஒரே இரவில்' பேரினவாதிகள் என்ற முத்திரை குத்தினார்களோ, அதே போல தான் ஜெயமோகன் போன்ற வகையறாக்களுக்கும்... "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்"

ஜெயமோகன் அவர்களே இதுவும் ஒரு விபச்சாரம் தான் 'எழுத்துக்களால் உண்மைகளைக் கற்பழிக்கும் விபச்சாரம்!'

மதம் என்னும் போதை உண்பவர்கள்..!

ஒன்றை வெறித்தனமாக நேசிப்பதும் ஒரு போதை தான். அதன் பின்னர் யாராவது அந்த ஒன்றின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் மனம் ஏற்க மறுக்கும். விமர்சனங்களை ஏற்க தைரியம் இல்லாது, விமர்சிப்பவன் மீது வெறி தனமாக பாய்வான். ஆம்! மதம் என்பதும் ஒரு போதை தான். அது அளவுக்கு அதிகமாகும் போது மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். சாதாரண ஐந்தறிவு ஜீவனின் நிலைக்குள் சென்றுவிடுகிறான்.

ஒரு வெறி கொண்ட நாயோ அல்லது ஒரு மதம் கொண்ட யானைக்கோ தன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் எவ்வாறு துச்சமாக தோணுமோ, அதே போல தான் மனிதனுக்கு மதம் பிடிக்கும் போதும்.

மதங்கள் அனைத்தும் நல்லதை தான் சொல்கிறது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அந்த மதத்தையும் தங்கள் சுயநலத்துக்கு ஏற்றது போல் மாற்றி அமைப்பதில் மனிதனின் பங்கு அளப்பரியது.

"தேங்கி நின்றால் அது குட்டை. ஓடினால் தான் ஆறு. குட்டைக்குள் அழுக்கு படியும், நுளம்பு குடிபுகும், புழுக்கள் குட்டி போடும். ஆனால் ஆறு அவ்வாறு அல்ல. அடித்துச்செல்லும் போக்கில் தன்னை தானே சுத்தமாக்கி அதில் இறங்குபவர்களையும் சுத்தமாக்கி செல்லும்".- மத வெறியர்கள் இந்த குட்டையின் ரகம், இவர்கள் பழமைவாதங்களிலே தேங்கி நிற்பவர்கள்.

இஸ்லாமிய மதத்திலே இந்த நூற்றாண்டிலும் 'மதம்' என்ற போர்வையில் இன்றும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை மேற்கொண்டு விட்டு "அது பாதுகாப்புக்காக" என்று சர்வ சாதாரணமாக கூறி நியாயப்படுத்துவது, பெண்களை கண்டவுடன் தம் மனம் அலைபாயுதே, வக்கிரமாக சிந்திக்கிறதே என்பதற்காய் இருபதாம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு பர்தா அணிவித்த பின்னே வீதியில் இறங்க அனுமதி அளிக்கும் சிறுமைத்தனம். சிறு குற்றம் செய்தவனுக்கு தானும் எதிராக கொடுக்கப்படும் மனித குல விரோத தண்டனைகள்;நியாயப்படுத்தல்கள்..

இத்தனையும் செய்துவிட்டு ஓட்டுமொத்த பழியையும் மதத்தின் மீது போடும் மூடர்கள் இவர்கள்.

'என்மதம் பெரிது, என்மதம் மட்டும் தான் பெரிது' என்று வெறித்தனமாக கத்தும் இவர்களால் தான் நல்லதை சொல்லும் மதமும் சாக்கடையாகிறது.

கடந்த வருடத்திலே நைஜீரியாவில் தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினவழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது இஸ்லாமிய மத வெறியர்கள் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள். காரணம் பழிவாங்கலாம் (அவர்கள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது போலும்). வேற்று மதத்தலங்களை தாக்குவது என்பது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல! ஆனால் இவர்கள் மதத்தலங்களை தாக்குவதன் மூலம் என்ன கூற வருகிறார்கள் என்பதை சாதாரணமாகவே புரிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் தன்னை இஸ்லாமியராக கூறிக்கொண்டு ஒருவர் (விதண்டா)விவாதம் செய்யும் போது பின்வருமாறு சொன்னார்..

இதை நினைத்து சிரிப்பதை தவிர வேறொன்றும் தெரியவில்லை. முழு முட்டாள் தனமான கருத்து.. அந்த கருத்தில் கூட ஆக்கிரமிப்பும்,அடக்குமுறை தான் புதைந்து கிடக்கிறது.

எனக்கு தெரிந்து ஒரு மொரோக்கோ நாட்டு இஸ்லாமியன் ஒருவன். அவனிடம் ஒரு ஐபோன் உள்ளது.. அந்த ஐபோனை அவன் பாவிப்பதே செக்ஸ் படங்களும்,வீடியோக்களும் பார்க்க தான். ஒருவேளை மேலே குறிப்பிட்ட நபரின் கருத்துக்களை காட்டினால் அவன் விழுந்து விழுந்து சிரிக்க கூடும். சொல்லப்போனால் ஐரோப்பாவில் நிகழும் பெரும்பாலான பாரிய குற்றச்செயல்கள், விபச்சாரங்கள் இந்த இஸ்லாம் மதத்தை முன்னுறுத்தி, 'ஒழுக்க சீலர்களான வாழ்கிறார்கள்' என்று மேற்சொன்னநபர் நம்பியிருக்கும் இஸ்லாமியர்களால் தான் நிகழ்த்தப்படுகிறது. இதில் சிறிது வாரங்களுக்கு முன்னர் பிரான்சிலே கண்மூடித்தனமாக பல அப்பாவிகளை சுட்டுக்கொண்ட இருபத்தி ஐந்து வயதுகளை கூட தாண்டாதஇஸ்லாமிய இளைஞனும் அடங்கும்.

சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய வலைப்பதிவர் ஒருவர் என்னுடன் விவாதம் செய்யும் போது உச்ச கட்டமாக ஒரு கேள்வி கேட்டார் பாருங்கள் " உனக்கு மதம் பிடிக்காது என்று சொல்லுறியே! உன் பெயரே கந்தசாமி நீ ஒரு முருக பக்தன் தானே" என்று.. உடனே நான் கேட்டேன் அப்போ "ராமசாமியை (பெரியார்) ராம பக்தன் என்பியா" என்று... மதம் என்ற போதையில் கிடக்கும் இவர்களுடம் இவ்வாறான 'புத்திசாலித் தனத்தை' தான் எதிர்பார்க்கலாம்.

இவரை சொல்லி குற்றம் இல்லை! காரணம் இவருக்குள் மதம் என்ற போதை ஏற்றப்பட்டுள்ளது. இதை அவரே ஒரு முறை சொன்னார்.
/////~முஹம்மத் ஆஷிக் citizen of world~said...நான் இஸ்லாத்திற்குள் நுழைவதற்கு முன்னமே இந்து மத வேதங்கள் குறித்து சற்று தெளிவாக ஆராய்ந்தவன் தான்..///// மதம் என்ற பெயரில் நான்றாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இதே பொழைப்பாய் உலாவுகிறார் போலும். இவ்வாறு பலர் வெளி உலகிலும், வலை உலகை மதப்பிரச்சாரமாகவும், பிரிவினைகளை உண்டு பண்ணுவதற்காகவுமே அலைகிறார்கள். இப்படி பட்டவர்கள் எப்போ திருந்துகிறார்களோ அப்பொழுது தான் உலகிலே இவர்கள் அடிக்கடி கூறிக்கொள்ளும் "சாந்தியும் சமாதானமும்" நிலைக்கும்.