முற்போக்குவாதிகளின் "மேட்டுக்குடி"


பூனை குறுக்கால் போனாலும்
எதிர்க்கட்சிகாரன் சதி - என
சொல்லி அங்கலாய்க்கும்
ஆளும் கட்சிகள் போல

மக்கள் மனங்களில்,
நடைமுறைகளில் 
சில நல்ல மாற்றங்கள் தெரிந்தாலும்
பொறுத்துக்கொள்ள முடியாதவராய்
"மேட்டுக்குடியின் சூழ்ச்சி இது"
என்று சொல்லி முகம்சுழிக்கும்
"முற்போக்குவாதிகள்"

கால மாற்றத்தில் 
மக்களிடையே ஏற்படும்
சாதி பேதம்,ஏற்ற தாழ்வுகள்
ம(ற)றைந்து போக முற்பட்டாலும்
இழுத்து பிடித்து பழமைகளிலே நிற்கும்
மார்க்சிச போலிவாதிகள், 
ஊர் இரண்டுபட்டால் தானே
கூத்தாடிகளுக்கு
கொண்டாட்டமும் பிளைப்புக்களும்..!

இன்னும் எனக்கேன் தடைகள்..?


இரு  நிலவுகள் ஒன்றாகி சிலிர்க்கின்றது
சில நினைவுகள் நெஞ்சோடு துளிர்கின்றது
சித்தம்  இழந்து, சுயம் மறந்து
வரம் ஒன்று கேட்க மனம் துடிக்கின்றது.

பட்டாம் பூச்சி இறக்கையாய் கனவுகள்
கண்விழித்து பார்த்தால் வெறும் சுமைகள்  
சுமந்து செல்ல, சுகத்தை வெல்ல
வேண்டும் காதல் சிலுவைகள்.

எழுதுகோல் முனையில் எண்ணங்கள் 
எழுதிட வேண்டும் இவள் கன்னங்கள்.
படித்து பார்த்து, மடித்து வைக்க
இரு  உதடுகள் தேன் கிண்ணங்கள்.

இரு விழி மேல் கொண்ட பிறைகள்
இரவிலும் எனக்கவை சிறைகள்
விட்டு  வர, விலகியிருக்க
இன்னும் எனக்கேன் தடைகள்?!

வழி தேடும் தொடர் பயணங்கள்
விழி மேலே இவள்  சலனங்கள்
நடந்து செல்ல, தொடர்ந்து செல்ல
வேண்டும் சில ஜனனங்கள்..