பூனை குறுக்கால் போனாலும்
எதிர்க்கட்சிகாரன் சதி - என
சொல்லி அங்கலாய்க்கும்
ஆளும் கட்சிகள் போல
மக்கள் மனங்களில்,
நடைமுறைகளில்
சில நல்ல மாற்றங்கள் தெரிந்தாலும்
பொறுத்துக்கொள்ள முடியாதவராய்
"மேட்டுக்குடியின் சூழ்ச்சி இது"
என்று சொல்லி முகம்சுழிக்கும்
"முற்போக்குவாதிகள்"
கால மாற்றத்தில்
மக்களிடையே ஏற்படும்
சாதி பேதம்,ஏற்ற தாழ்வுகள்
ம(ற)றைந்து போக முற்பட்டாலும்
இழுத்து பிடித்து பழமைகளிலே நிற்கும்
மார்க்சிச போலிவாதிகள்,
ஊர் இரண்டுபட்டால் தானே
கூத்தாடிகளுக்கு
கொண்டாட்டமும் பிளைப்புக்களும்..!


