"என் தாய்க்கு.." நூறாவது பதிவு!

பதிவுலகுக்கு எதற்கு வந்தேன், எப்படி வந்தேன்  என விவரமாக சொல்லி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால் 'பொழுது போகவில்லை வந்தேன்'. (அட நம்புங்கப்பா!)  தனிமை என்பது எவ்வளவு கொடுமை! அதை இரண்டு வருடங்களாக அனுபவித்த எனக்கு, இன்று என் நண்பன், உறவு, காதலி என்று எல்லாமே  இந்த பதிவுலகும், என் பிளாக்கரும் ஆகிப்போச்சு! இங்கு வந்ததால் நான் அறிந்து கொண்டவை பல, இழந்து கொண்டவை என் பல இரவுகள் தூக்கம். உண்மையை சொல்லவேண்டும் என்றால் இன்னும் சில கிழமைகளில், மாதங்களில் பதிவுலகில் இருந்து காணாமல் போய் விட கூடிய சந்தர்ப்பம் உண்டு, ஆனால் மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையுடன்...

தொன்னூற்று ஒன்பதாவது பதிவு வரை என்னோடு கூடவந்த என் தாய் மொழிக்கு  இந்த  நூறாவது  பதிவு.

ன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடி தோற்றுப்போகிறேன். 
தேடிப் பொறுக்கும் வார்த்தைகளையும் 
கோர்த்தும் சேர்த்தும் 
இயலாமையால் சோர்ந்துவிடுகிறேன்;
பாவலர்கள் பலர் போற்றிய உனக்கு ,இந்த 
பாலகன் நான் எம்மட்டு? 
    அன்னைக்கடுத்து நான்
    அதிகமாக நேசிப்பது உன்னையே
    அதனால் தான்,
    நான் இவ்வுலகில் சுவாசிப்பதும், வாசிப்பதும்.

    "அம்மா" என்ற  சொல் முதல்
    என் நாவை  அரவணைத்துக்கொண்ட
    தாய் நீ - அதன் பின்
    என் பேச்சிலும், மூச்சிலும்
    சந்தோசத்திலும், வலியிலும்
    உன்னையே உணர்ந்து கொள்கிறேன்.

    உன் பெருமையை
    உன் புகழை
    உன் இனிமையை
    என்னவென்று சொல்வேன்!

    ஒளவை, பாரதி, வள்ளுவன் என்று- உனை
    ஆலமரமாக்கி  அதன் ஆணிவேரகிப்போனவர் பலர்.
    நாவலர், சேக்கிழார்  போன்று
    உன் விழுதுகளாக நின்றவர்களும் உளர்.

    இன்று வேற்று மொழி  கதைப்பதையே
    வீரமாக கொள்ளும்  நம்மவர்கள் பலர்,
    வேற்றுமொழியில் இருந்து வந்து
    தமிழ் மொழியே செம்மொழி  எனக்கண்டு
    பாண்டித்தியம்  பெற்ற
    'வீரமா முனிவர்'களும் உளர்.

    இலக்கிய  உலகிலும்
    இல்லற  வாழ்விலும்
    உன்னால் பிழைத்துக்கொள்பவர்கள்  பலர்.
    அரசியல் உலகிலும், அடுத்தவனை
    அடிமை கொள்ள எண்ணும் அராஜக வாழ்விலும்
    உன்னை வைத்தே பிழைப்பு  நடத்துபவர்களும் உளர்.


    இன்று  இலத்திரனியல்  உலகில்
    இணையம்  என்ற கடலில்
    உன் கரம் பிடித்து  கரை சேர துடிக்கும்
    கப்பல்களாக பலர் - அதில்
    சிறு ஓடம்  நான்
    உன்பால் சிரம்  தாழ்த்துகிறேன்!

    இது வரை என்கூட பயணிக்கும் உறவுகளுக்கும், எனக்கு பின்னூட்டமிடும் உறவுகளுக்கும் மிகவும் நன்றிகள். 
                                                      

    நட்புடன் 
                                                      கந்தசாமி.


    65 comments:

    1. நூறாவது பதிவை தாய் தமிழுக்கு அர்ப்பணித்த உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை ......நன்றி !

      ReplyDelete
    2. 100 வருஷம் இந்த பிளாக்கரும், பிளாக்கும் காலம் முழுக்க சிந்து பாடனும்..

      ReplyDelete
    3. நூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள். தாய்க்கு ஒரு த்ங்கமான தாய்மொழிகு நன்றி நவின்ற பாங்குக்கு வாழ்த்துக்கள்.
      வாழக..வளரக..

      ReplyDelete
    4. வாழ்த்துக்கள்..

      ReplyDelete
    5. பிளாக்கருக்கு ரெஸ்ட் குடுக்கணும்ன்னு நெனச்சா விட மாட்டேன் .....

      ReplyDelete
    6. தாய் வாழ்த்து அருமை

      100 வது பதிவிற்கு வாழ்த்துகள்

      ReplyDelete
    7. nooru thamil thaaikku enpathil makilchhci.. vaalththukkal

      ReplyDelete
    8. வாழ்த்துகள்

      ReplyDelete
    9. சதம் அடித்தமைக்கு வாழ்த்துகள் கந்தசாமி. அவ்வப்போது எனது பதிவிலும் கருத்து சொல்லி வருவதற்கு நன்றி. இதயங்களை இணைக்கும் இணையம் உள்ளவரை பெருகும் நட்பு வட்டம்.

      ReplyDelete
    10. 100வது பதிவிற்கு வாழ்த்துகள் சகோ..வித்தியாசமான முறையில் 100வது பதிவைக் கொண்டாடி உள்ளீர்கள்.

      ReplyDelete
    11. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். நூற்றுக்கு நூறு உண்மையான பதிவு இது.சுருக்கமாகவும் சுத்தமாகவும் உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

      ReplyDelete
    12. மனமார்ந்த வாழ்த்துக்கள்...

      ReplyDelete
    13. தமிழ்மணம் 7 வதும் போட்டாச்சி....

      ReplyDelete
    14. வணக்கம் பாஸ்,
      நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    15. நூற்றுக்கும் இனி வரும் நூற்றுக்கும் வாழ்த்துக்கள்.தமிழ் சுவாசத்துடன் வாழ்க வளமுடன்.

      ReplyDelete
    16. மாப்பிள இப்பதானே நான் பதிவுலகுக்கு வந்தனான்..  அதுகுள்ள ஏன் நீ ஓடப்பாக்கிறாய்..!?  
      நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

      காட்டான் குழ போட்டான்...

      ReplyDelete
    17. பாஸ், நமக்குப் பார்ட்டி எல்லாம் இல்லையா?

      ReplyDelete
    18. ///பாவலர்கள் பலர் போற்றிய உனக்கு ,இந்த
      பாலகன் நான் எம்மட்டு? ////

      பாவலர்களும் ஒருநாள் பாலகர்களே
      பாவலர்கள் புரிந்த , அறிந்த , தெரிந்த , தெளிந்த தேன் தமிழை
      இந்த பாலகன் புரிந்தது பெருமைபடவேண்டிய செய்தி அல்லவா
      உங்களின் நூறாவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

      ReplyDelete
    19. வாழ்த்துக்கள் சாமி அடிச்சு தூள் கிளப்புங்க

      ReplyDelete
    20. வாழ்த்துக்கள்..

      ReplyDelete
    21. ஆகா நூறாவது பதிப்பா!....வாழ்த்துக்கள்
      நூறாவது பதிப்பை பகிர்ந்துள்ளவிதம் அருமை!....
      இதுபோன்று ஆயிரம் பதிப்புகள் இடும்வரை
      இறைவன் தங்களை இந்த வலைத்தளத்தில்
      கட்டிப்போட மனமாரப் பிரார்த்திக்கின்றேன் .
      நன்றி பகிர்வுக்கு.....

      ReplyDelete
    22. பதிவுலகுக்கு எதற்கு வந்தேன், எப்படி வந்தேன் என விவரமாக சொல்லி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை//

      ஏன் பாஸ், ஒரு பெரிய...........................................................................................................................
      ப்ளாஷ் பேக் பின்னாடி இருக்கும் போல இருக்கே. பில்டப் பயங்கரமா இருக்கே.

      ReplyDelete
    23. ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால் 'பொழுது போகவில்லை வந்தேன்'.//

      நீங்க சொன்னாப் பிறகும் நம்பாமல் இருப்பேனா.

      நம்புறோம் பாஸ்.

      ReplyDelete
    24. உன் கரம் பிடித்து கரை சேர துடிக்கும்
      கப்பல்களாக பலர் - அதில்
      சிறு ஓடம் நான்
      உன்பால் சிரம் தாழ்த்துகிறேன்!//

      பெருக்கத்து வேண்டும் பணிதல்
      சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு, எனும் வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தையினைச் செயலில் காட்டியுள்ளீர்கள்.

      தொடர்ந்தும் ஜமாயுங்க பாஸ்.
      மீண்டும் வாழ்த்துக்கள் கந்து.

      ReplyDelete
    25. //இன்னும் சில கிழமைகளில், மாதங்களில் பதிவுலகில் இருந்து காணாமல் போய் விட கூடிய சந்தர்ப்பம் உண்டு,//

      என்ன கலியாணம் கட்டப் போறீங்களா பாஸ்?

      ReplyDelete
    26. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ.

      ReplyDelete
    27. நூறாவது பதிவலி் நெஞ்சைத் தொட்டுட்டிங்க...

      வாழ்த்துக்கள் சகோதரம்....

      ReplyDelete
    28. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்,,

      தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

      ReplyDelete
    29. வாழ்த்துகள் கந்தசாமி!தமிழ்த்தாயும் வாழ்த்துகிறாள்.

      ReplyDelete
    30. 100வது பதிவு திருவிழாக்கு வாழ்த்துக்கள் சகோ. தமிழ்தாய்க்கு அர்ப்பணித்தமை மிக அருமை. பதிவுலகில் நீடித்து நிலைத்து நிற்பீர்கள். நாங்களும் உங்களைத் தொடர்வோம். சந்தேகமே வேண்டாம்.

      ReplyDelete
    31. தாயிக்கு அஞ்சலி!-தமிழ்
      தாயிக்கு அஞ்சலி!
      அருமை!

      புலவர் சா இராமாநுசம்


      !

      ReplyDelete
    32. வாழ்த்துக்கள் :)

      ReplyDelete
    33. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா.

      ReplyDelete
    34. வாழ்த்துக்கள்.பதிவு நன்று.

      ReplyDelete
    35. 100 பதிவுக்கு  வாழ்த்துக்கள் சிறப்பாக தமிழின் பெருமையைத் தீட்டியுள்ளீர்கள்.
      விடைபெறுவது கொஞ்சம் கவலையளிக்கின்றது சிலநேரங்களில் சிலதைத் தாங்கியாகனும்  நேரம் கிடைக்கும் போது இனைந்து கொள்ளுங்கள் யாவும் சிறப்பானவையாகட்டும் சகோ!

      ReplyDelete
    36. 100 வது பதிவை பதிவுக்கே சமர்ப்பித்திருக்கிறீர்கள்
      கவிதை அருமையிலும் அருமை
      தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்

      ReplyDelete
    37. என்ன பாஸ் இப்படி சொல்லுறீங்க....

      தாய் மொழியை பற்றி எழுதினால் அதில் ஏது தவறு...

      எனது கனா.................

      ReplyDelete
    38. சகோ வாழ்த்துக்கள் உங்களின் ௧௦௦ வது பதிவிற்கு . சிறப்பாய் உள்ளது கவிதை.

      ReplyDelete
    39. நூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள்.
      தமிழ்தாய் வாழ்க

      ReplyDelete
    40. இனிய வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    41. வாழ்த்துக்கள் தல...தொடர்ந்து செல்லுங்கள்..நாங்கள் இருப்போம் உங்களுடன்!

      ReplyDelete
    42. நுறாவது பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    43. நேற்று முழுதும் பதிவின் பக்கங்கள் வரவில்லை.அதானால் நான்தான் கடைசி வாழ்த்தோடு ஆனாலும் அன்போடு வாழ்த்துகிறேன் கந்தசாமி.இன்னும் நிறைவான பதிவுகளை எழுதுங்கள் !

      ReplyDelete
    44. வாழ்த்துக்கள்..

      ReplyDelete
    45. நூறாவது வயதுக்கு வாழ்த்துக்கள் சகோ/

      இன்னும் இன்னும் படைப்பில் மேலோங்க,,
      ஒருகிழமைக்குள் காணாமல் போனாலும் மீண்டும் வந்து சேர
      நல்ல செய்தியுடன் மீண்டும் வலம் வர வாழ்த்துகின்றேன்...

      தாய்மொழியை வாழ்த்திய கவிதை
      அருமை...

      ReplyDelete
    46. உங்களைப்போலவே நானும் ஒருவர்,,,
      அத்தனை வருடம்தான் எனது காத்திருப்பும்...

      ReplyDelete
    47. வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து வழமைபோல் பயனுள்ள விடயங்களை எழுதுங்கள்!

      ReplyDelete
    48. This comment has been removed by the author.

      ReplyDelete
    49. அம்மா! ஒவ்வொரு உயிரும்..... மண்ணில் மரிக்கும்வரை, தன்னில் நினைக்கவேண்டும்!

      அம்மாவிற்கும் எழுதும் கவிதைகள் என்றுமே அழகுதான்...

      வாழ்த்துக்கள் நண்பரே

      http://nisiyas.blogspot.com/2011/07/blog-post_29.html

      ReplyDelete
    50. நூறு ஆயிரத்தைத்தொட வாழ்த்துகள்..

      கவிதையும் ரொம்ப நல்லாருக்கு, தாய்க்காக எழுதப்பட்டதல்லவா!!.. அதான் :-)

      ReplyDelete
    51. நூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள் நண்பரே....

      ReplyDelete
    52. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    53. Hi Friend This Is Mohan Vellore
      We buyd one script (cannot copy) your content anyone Copying ?
      This problem Was Solved
      Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
      You Need This Just Rs 500 Lets buy
      Contact Mohanwalaja@gmail.com

      ReplyDelete
    54. ░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░
      ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
      ░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░░▓▓▓▓▓░░░░▓░░░▓▓▓▓▓░░░░▓▓▓░░▓▓▓▓░
      ░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░░░░▓░░▓░░░░░▓░░░▓░░▓░░░░▓▓░░▓▓░░▓░░
      ▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░▓▓▓▓▓▓▓▓░░░▓▓▓▓▓▓▓▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░▓░▓░░▓░░▓░░
      ▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░░▓░▓░░░░▓░░░▓░▓░▓░░░░▓░░▓░▓░▓░░▓░░▓░░
      ░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░░░▓░░▓▓▓▓░░░░▓░▓░░▓▓▓▓░░▓░░▓▓░░░▓░░▓░░
      ░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░▓▓░░░░▓▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░
      ░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░▓░░░░░░░░▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

      ReplyDelete
    55. தாமதத்திற்கு மன்னிக்கவும்
      நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

      ReplyDelete
    56. நூறு ஆயிரம் ஆகும் ... ஆயிரம் இலட்சங்களாகும் .... இலட்சங்கள் கோடிகளாகும்...

      அதுபோல உங்கள் எழுத்தும் எங்கள் வாழ்த்தும்..! !

      ReplyDelete
    57. மன்னிக்கவேண்டும் நண்பரே மிகவும் தாமதமாகத்தான் இந்தப்பதிவை வாசித்தேன்.நன்றாக இருக்கின்றது அதுவும் 100வது பதிவை தமிழ் மொழிக்கு சமர்ப்பித்தது இன்னும் கூடுதல் சிறப்பு.உலகில் பல மொழிகள் இருந்தாலும் சிறப்பு பெற்ற மொழிகள் சிலதான் அதில் நம் தமிழ்மொழியும் ஒன்று தமிழ் மொழிபேசுகின்றவனாக பிறந்தில் எனது இந்தப்பிறவி சிறப்புப்பெற்றுள்ளது.

      ReplyDelete